தோழர் தா.பாண்டியன் மறைந்தார்! உழைக்கும் வர்க்கத்தின் குரலாக ஒலித்தவர்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மூத்த தலைவர்களுள் ஒருவரான,
தோழர் தா.பாண்டியன் (88)
உடல்நலக் குறைவால்,
வெள்ளிக்கிழமை (பிப். 26)
இயற்கை எய்தினார்.
இந்திய கம்யூ., கட்சியின்
மூத்த தலைவர்களுள் ஒருவரும்,
முன்னாள் மாநிலச் செயலாளருமான
தா.பாண்டியன், கடந்த சில
ஆண்டுகளாகவே சிறுநீரக
கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
பிப். 24ம் தேதி அவருடைய
உடல்நலம் மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக
சென்னை ராஜிவ்காந்தி
அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார்.
எனினும்,
அவருடைய உடல்நிலையில்
எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பிப். 25ம் தேதி மாலையில் அவருக்கு
செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
தீவிர சிகச்சை அளித்தும் பலன்
அளிக்காத நிலையில்,
வெள்ளிக்கிழமை (பிப். 26)
காலை 10.05 மணியளவில்
அவர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம்
உசிலம்பட்டி அருகே உள்ள
வெள்ளைமலைப