
பங்குச்சந்தை: உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்; புதிய உச்சம் தொட காத்திருக்கும் நிப்டி!
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் ஓரளவு உயர்வுடன் முடிவடைந்துள்ளது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 12), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 847.28 (1.18%) புள்ளிகள் உயர்ந்து 72568 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குசந்தையான நிப்டி 247.35 புள்ளிகள் உயர்ந்து (1.14%) 21894 புள்ளிகளில் முடிவடைந்தது.
வரும் வாரத்தில்,
நிப்டி 22000 புள்ளிகளை கடந்து
வரலாற்று உச்சத்தை எட்டும் என
சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
கடைசி மூன்று அமர்வுகள் ஏற்றத்துடன்
இருந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாக
மனநிலையில் இருக்கிறார்கள்.
அதேநேரம், அடுத்தடுத்து வெளியாக உள்ள
மூன்றாவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்து,
சந்தையில் அதிகளவில் ஏற்ற, இறக்கங்களும்
இருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள்
எச்சரிக்கின்றனர்.
ஜன. 8 - ஜன. 12 வரையிலான வாரத்தில்,
தேசிய பங்குச்சந்தையில் ஐடி துறை
சார்ந்த பங்குக...