Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Hasini murder

கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை:  மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை: மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

குற்றம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆறு வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த் வழக்கு ஒரு வழியாக இன்று (பிப்ரவரி 19, 2018) முடிவுக்கு வந்திருக்கிறது. சிறுமியை பறிகொடுத்த பெற்றோருக்கு மகளின் கருகிய சடலமே கிடைத்தது. முழுதாகக்கூட கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் செய்துவிட்டு 24 வயதான தஷ்வந்த்தால் ஒரு சராசரி மனிதன் போலவே எப்போதும்போல எந்தவித குற்ற உணர்வும் இல்லாமலேயே நடந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஊரே சிறுமியை காணாமல் தேடும்போது, தான் மட்டும் அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தால் எப்படி என அப்போது அவன் யோசித்திருக்கக் கூடும். அதனால்தான் அவனே அனகாபுத்தூர் பகுதியில் சிறுமியின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்து, நல்ல பிள்ளை பெயர் எடுக்க முடிவு செய்திருந்திருக்கிறான். ஆனால், அதுவே அவனுக்கு தூக்குத் தண்டனைய