Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Governor Banwarilal Purohit

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.   சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.   130 பேருக்கு தங்கப்பதக்கம்: பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.   பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு
அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்
நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  புலனாய்வு இதழ்களில் தனக்கென தனித்த அடையாளத்துடன், எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும் இன்றுவரை பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது நக்கீரன். இந்த இதழின் ஆசிரியர் கோபால், நேற்றைய (அக்டோபர் 9, 2018) தினம் கைது செய்யப்பட்ட நிமிடம் முதல் ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ஆனார்.   சின்னதாக ஒரு விசாரணை புனே செல்வதற்காக நக்கீரன் கோபால், தனது நண்பரான சித்த மருத்துவர் ஒருவர், மற்றும் நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் ஆகியோருடன் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். சிறுநீர் கழிப்பதற்காக 'வாஷ் ரூம்' சென்ற கோபாலிடம் நெருங்கிய போலீசார், உயரதிகாரியின் பெயரைச்சொல்லி 'சின்னதாக ஒரு விசாரணை' என அழைக்கின்றனர்.   அப்படியே அவரை அணைத்துக் கூட்டிச்செல்லும்போது, அவரிடம் இருந்த செல்போனை பறிக்க போலீசார் முயன்றபோதே, தன்னை கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் க