Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: curse

”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த வாரம் கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், கணவரைக் காண்பதற்காக 15 நாள்கள் அவசரகால பரோல் விடுப்பு கேட்டு சசிகலா, கர்நாடகா மாநில சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 5 நாள்கள் மட்டும் பரோல் விடுப்பு அனுமதி வழங்கியது. கடந்த 6ம் தேதி மாலை 3 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அன்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார். சிறைக்கு வெளியே கர்நாடகா அதிமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையிலும் அவரு