
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!
சேலத்தில்,
பட்டு நெசவாளர்கள் கைத்தறி
கூட்டுறவு சங்கத்தில் சரக்கு
விற்பனை இருப்பில் 1.10 கோடி
ரூபாய்க்கு மேல் போலி
முறைகேடு செய்திருப்பது
அம்பலமாகி உள்ளது. இந்த
நூதன மோசடி மூலம்
ஆளும் அதிமுக பிரமுகர்கள்
நெசவாளர்களின் ரத்தத்தையும்
உறிஞ்சி குடித்திருப்பதாக
குற்றச்சாட்டுகள்
கிளம்பியுள்ளன.
சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், 'சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட்' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கைத்தறியால் நெய்யப்பட்ட வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் பெயர் பெற்றது இந்நிறுவனம். இதில் தற்போது, 1558 நெசவாளர்கள் 'ஏ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 1150 நெசவாளர்கள் தொடர்ந்து வெண்பட்டு உருப்படிகளை நெய்து வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சராசரியாக 12 கோடி ரூபாய். கடைசிய...