கடந்த 2 மாதத்தில் 15 லட்சம் கோடி ரூபாய் இழப்பு! பங்கு முதலீட்டாளர்கள் சோகம்!
ஓமிக்ரான், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியது, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 15.30 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக,
அமெரிக்காவின் ஃபெடரல்
வங்கியின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும்
என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், வெளிநாட்டு
முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை
விற்கத் தொடங்கினர். அதன் தாக்கம்,
இந்திய பங்குச்சந்தையில் பெரிய
அளவில் எதிரொலித்தது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி,
வரலாற்றில் முதன்முறையாக கடந்த
அக். 19ம் தேதி 18604 புள்ளிகள்
வரை எகிறியது. அடுத்த ஒரே மாதத்தில்
10 சதவீதம் வீழ்ச்சி அடைந்து, தற்போது
16782 புள்ளிகள் ஆக சரிவடைந்துள்ளது.
கடந்த வாரம் 17516 புள்ளிகளாக
அதாவது, 3.5 சதவீதம் வரை உயர்ந்த