Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: மலையேற்ற குழுவினர்

குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

ஈரோடு, சென்னை, தமிழ்நாடு, தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
குரங்கணி கொழுக்கு மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஹெலிகாப்டர் முன்பு ஆசிரியர் பயிற்சி மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வமாக நின்று கொண்டு செல்பி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான், 'அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்; திரும்பிய திசையெல்லாம் இடி' என்ற தலைப்பில் புதிய அகராதி இணையத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். தொடக்கக் கல்வித்துறை மட்டுமின்றி ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட துறை அதிகாரிகளின் தலையீட்டால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சளுக்கு ஆளாவது பற்றியும், அதனால் குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாகவே எழுதியிருந்தோம். ஆசிரியர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், குரங்கணியில் ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்