Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: போக்குவரத்துத்துறை

40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சாலை விபத்துகளில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் பலியாகின்றனர் என்பது போக்குவரத்துத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.   தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவது போக்குவரத்துத்துறைக்கு கடும் சவாலாக விளங்குகிறது. சாலை விபத்துகளில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவது பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து, சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.   கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 16157 பேர் பலியாகியுள்ளனர். தொடர் விழிப