பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய வின் ஸ்டார் சிவக்குமார் செட்டில்மென்ட் கமிஷனுக்கும் டிமிக்கி! ஜாமினை ரத்து செய்ய பரிந்துரை!!
சேலத்தில், ரியல் எஸ்டேட்
நிறுவனத்தின் பெயரில்
பல நூறு கோடி ரூபாய் சுருட்டிய
வின்ஸ்டார் சிவக்குமார்,
செட்டில்மென்ட் கமிஷன் முன்பும்
விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து
டிமிக்கி கொடுத்து வருகிறார்.
இதனால் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்த
கமிஷனின் தலைவர், சிவகுமாருக்கு
வழங்கப்பட்ட ஜாமினை ரத்து
செய்யவும் பரிந்துரை
செய்துள்ளார்.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். புதிய பேருந்து நிலையம் அருகே வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் மற்றும் சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயர்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வந்தார். வீட்டு மனைகளில் முதலீடு செய்யும் நபர்களுக்கு, அத்தொகைக்கு உரிய மதிப்பில் வீட்டு மனை அல்லது ஓராண்டில் முதலீட்டு தொகையை இரட்டிப்பு மடங்காக வழங்கப்படும் என்று செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்களில் விளம்பரம் செய்தார். இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை ந