11000 புள்ளிகளை நோக்கி தலால் ஸ்ட்ரீட்! சந்தையில் ஏற்ற, இறக்கம் தொடரும்!
மும்பை தலால் தெருவின்
பங்குச்சந்தைகளைப்
பொருத்தமட்டில் நடப்பு
வாரத்திலும் நிலையற்றத்
தன்மை தொடரும் என்கிறார்கள்
சந்தை நிபுணர்கள். என்றாலும்,
நிப்டி 11000 புள்ளிகளைக்
கடக்கும் புதிய உச்சம் தொட
அதிகம் வாய்ப்பு உள்ளதாகச்
சொல்கிறார்கள்.
கடந்த வாரத்தில்,
சென்செக்ஸ் மற்றும் நிப்டி
இரண்டு பங்குச்சந்தைகளின்
இண்டெக்ஸூம் தலா ஒன்றரை
சதவீதம் உயர்ந்தன.
கோவிட் - 19 தொற்று மீண்டும்
அதிகரித்து வருவது
முதலீட்டாளர்களை கொஞ்சம்
பதற்றத்திலேயே வைத்திருந்ததால்
சந்தையில் நிலையற்றத்
தன்மையும் காணப்பட்டது.
''நடப்பு வாரத்தில் நிப்டியில்
திசை நகர்வு குறியீடு 10500 - 10950
மண்டலத்திற்குள் இருக்கும்.
மேலும், பங்குகள் குறிப்பிட்ட
உச்சத்திற்குச் செல்லும்போது
ஏற்ற, இறக்கம் அதிகமாக
இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,''
என்கிறார் ரேலிகர் புரோக்கிங்
நிறுவன துணைத் தலைவர்