Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: தீர்த்தக் கரையினிலே

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…! பாரதி எனும் காதல் மன்னன்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாரதியார்: 11.12.1882 - 11.9.1921   பாரதி என்ற பெயரைக் கேட்டதுமே புரட்சிக்கவி என்ற முன்னொட்டும் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும். ஆங்கிலேய அடக்குமுறையால் கூன் விழுந்த இந்தியர்களிடையே தன் பாட்டால் சுதந்திரத்தீ மூட்டியவனை அப்படித்தான் பார்க்க முடியும். கவித்திறத்தால் பெண் விடுதலையையும், சுதந்திர வேள்வியையும் வளர்த்தவன். இவை மட்டுமே அவன் முகமன்று. நான் பாரதியின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறேன். அதுதான் அவனுக்குள் இருக்கும் காதல் உணர்வு. சுதந்திர இந்தியா வேண்டும் என்பதும் கூட காதல் உணர்வுதான். ஆனால் கண்ணம்மா மீது அவன் கொண்ட காதல் அளப்பரியது. அவனுக்கு மட்டுமேயானது. 139வது பிறந்த நாளைக் கொண்டாடும் இன்றைய நாளிலும் கூட அவன் எழுதிய காதல் கவிதைகளை அத்தனை எளிதில் கடந்து விட இயலாது.   காதலில் விழுவது பலவீனமானவர்க்கே உரித்தானது என்ற உளவியல் ச