Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கடலூர்

சேலம்: சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்!

சேலம்: சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சில நேரங்களில் சினிமா காட்சிகளை விடவும், நிஜ உலகின் நிகழ்வுகள் கொடூரமானவையாக இருக்கும். கடந்த 2007ல், சரத்குமார், ஜோதிகா நடிப்பில் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' என்ற படம் வெளியானது. அந்தப்படத்தில், அப்பாவி அல்லது சபலிஸ்ட் ஆண்களை குறிவைத்து, அவர்களிடம் அனுசரணையாக பேசி, ஒருகட்டத்தில் காமத்திற்கு தூண்டில்போட்டு, பணம் பறிக்கும் மோசடி பெண் வேடத்தில் அசத்தியிருப்பார் ஜோதிகா.   கடந்த 2017ல் கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' படத்திலும்கூட அதன் நாயகி ஷிவதா, பார்வையற்ற வசதிடான இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் வரும் இதுபோன்ற காட்சிகள் திரில்லர் தன்மையுடன் இருந்தாலும், நிஜத்தில் நடக்கும்போது அதன் இழப்பும், மனவலியும் ஈடு செய்ய இயலாததாகி விடுகிறது. கிட்டத்தட்ட 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'அதே கண்கள்' படங்களின் நாயகிகளைப்போ
‘வசூல் சக்ரவர்த்திக்கு’ ஐஏஎஸ் பதவி உயர்வா?; கொதிப்பில் கூட்டுறவுத்துறை!

‘வசூல் சக்ரவர்த்திக்கு’ ஐஏஎஸ் பதவி உயர்வா?; கொதிப்பில் கூட்டுறவுத்துறை!

கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
கூட்டுறவு சங்கங்களிடம் டார்கெட் வைத்து வசூல் வேட்டை நடத்தும் தணிக்கைத்துறை அதிகாரிக்கு கன்ஃபெர்டு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4474 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் வாயிலாக அதன் உறுப்பினர்களுக்கு வேளாண் கடன், நகை அடகு கடன் போன்ற நிதிச்சேவைகளும், வேளாண்மைக்குத் தேவையான மானிய விலை உரம் உள்ளிட்ட இடுபொருள்களும் வழங்கப்படுகின்றன. தவிர, உறுப்பினர்களிடம் இட்டு வைப்பும் பெறப்படுகிறது. தனியாருக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் நகை அடகுக் கடன் வழங்குவதில் கூட்டுறவு சங்கங்கள் கொடிகட்டி பற க்கின்றன. இதுபோன்ற நிதிச்சேவைகள் நடைபெறுவதால், முறைகேடுகளைக் களையும் நோக்கில் ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் ஆண்டுக்கு ஒருமுறை தணிக்கைக்கு