
சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!
கொரோனா ஊரடங்கால்
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த,
சேலம் - சென்னை இடையேயான
பயணிகள் வானூர்தி சேவை
நாளை (மே 27, புதன்கிழமை)
முதல் மீண்டும் தொடங்குகிறது.
பயண நேரத்தில் மட்டும் சிறு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
கொரோனா வைரஸ்
பரவல் அபாயம் காரணமாக
நாடு முழுவதும் கடந்த
மார்ச் 24ம் தேதி மாலை
6 மணி முதல் ஊரடங்கு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுவரை நான்கு கட்டங்களாக
பல்வேறு தளர்வுகளுடன்
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நோய்ப்பரவல் அபாயம்
மட்டுமின்றி சமூக
இடைவெளியைக் கடைப்பிடிக்க
முடியாது என்பதால் பேருந்து,
ரயில், வானூர்தி சேவைகள்
உள்ளிட்ட அனைத்து வகையான
பொது போக்குவரத்துகளும்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சேலம் காமலாபுரம் வானூர்தி
நிலையத்தில் இருந்து
சென்னை, திருப்பதிக்கு
இயக்கப்பட்டு வந்த
ட்ரூஜெட் வானூர்தி
சேவையும் நிறுத்தப்பட்டது.
...