Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் ஜி.ஹெச். டாக்டர் உள்பட தமிழகத்தில் 20 பேருக்கு சிறந்த மருத்துவர் விருது!

சேலம் அரசு மோகன்
குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை
மருத்துவர் தனபால்
உள்பட தமிழகம்
முழுவதும் 20 பேருக்கு
சிறந்த மருத்துவர்
விருது இன்று
(2019 ஆகஸ்ட் 22)
மாலை
வழங்கப்படுகிறது.

 

மருத்துவத்துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் மருத்துவர்களைக் கவுரவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு சேவை, தனித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் இந்த விருது மற்றும் வெகுமதியை வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவர் தனபால்

அதன்படி, கடந்த 2018ம் ஆண்டிற்கான சிறந்த மருத்துவர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவள்ளூர் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனு ரத்னா, உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாரதி, சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நீலா கண்ணன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ஆனந்தகுமார், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் அருணாகுமாரி;

 

மருத்துவக்கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றி வரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் திருநாவுக்கரசு, சென்னை தமிழ்நாடு அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலீஸ்வரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ரேடியோ டயாக்னசிஸ் துறை பேராசிரியர் தேவிமீனாள், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால்;

 

பொதுமருத்துவம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்ககத்தின் கீழ் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மருத்துவர் மேஜர் சிவஞானம், விழுப்புரம் மாவட்ட தொற்றுநோய் தடுப்புப்பிரிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், சென்னை மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்புத்துறை மருத்துவர் விடுதலை விரும்பி, திருப்பத்தூர் நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பசுபதி, திருப்பூர் குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கீதாராணி;

 

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் பணியாற்றி வரும் தேனி சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவர் முத்தமிழ்செல்வி என அரசு மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் 16 மருத்துவர்களுக்கும் சிறந்த மருத்துவர் விருது மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படுகிறது.

 

இவர்களுடன் தனியார் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் குரோம்பேட்டை டாக்டர் ரேலா மருத்துவமனை மருத்துவர் பிரபாகரன், கோவை விஜிஎம் மருத்துவமனை மோகன் பிரசாத், சென்னை அப்பல்லோ முதன்மை மருத்துவமனை செங்கோட்டுவேலு, திருச்சி ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சென்னியப்பன் ஆகிய நான்கு பேருக்கும் சிறந்த மருத்துவர் விருது மற்றும் வெகுமதி வழங்கப்படுகிறது.

 

சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலையில் இன்று (ஆகஸ்ட் 22) மாலை நடைபெறும் விழாவில் மருத்துவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்குகிறார்.

 

சேலம் ஜி.ஹெச். மருத்துவர் தனபால்:

 

சேலம் அரசு
மோகன்குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில்
கண்காணிப்பாளராக உள்ள
தனபால் (55), கடந்த 1990ம்
ஆண்டு ஜூன் 4ம் தேதி
மருத்துவத்துறையில்
பணியில் சேர்ந்தார்.
நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் அருகே உள்ள
பட்டணம் கிராமம்தான்
இவருடைய சொந்த ஊர்.
30 ஆண்டுகளாக
மருத்துவத்துறையில்
பணியாற்றி வருகிறார்.

 

எம்எஸ் பொது அறுவை
மருத்துவரான இவர்,
பொதுசுகாதாரத்துறை மற்றும்
மருத்துவப்பணிகள்
துறைகளின் கீழ் கிராமப்புற
மக்களுக்கு 15 ஆண்டுகள்
சேவையாற்றி உள்ளார்.
அதையடுத்து, கடந்த 12
ஆண்டுகளாக
மருத்துவக்கல்வி
இயக்ககத்தின் கீழ்
சேலம் அரசு
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில்
பணியாற்றி வருகிறார்.

 

இதற்கிடையே,
இணை பேராசிரியராக
பதவி உயர்வு பெற்று,
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் ஓராண்டு
பணியாற்றி வந்தார்.
எஸ்ஐசியு, தீக்காய வார்டு,
செப்டிக் அறுவை அரங்கு,
அவசர அறுவை அரங்கு,
செமினார் அரங்கு
உள்ளிட்ட பிரிவுகள்
தொடங்க பெரும்
பங்காற்றினார்.
ஏற்கனவே சேலம்
மாவட்ட அளவில்
சிறந்த மருத்துவர்
விருது பெற்றுள்ளார்.
அவருக்கு தமிழக
அரசின் சிறந்த மருத்துவர்
விருது கிடைத்துள்ளதற்கு
சேலம் அரசு
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வர்
திருமால்பாபு,
சக மருத்துவர்கள்
வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

– பேனாக்காரன்