Wednesday, October 22மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!

சேலம், முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் அருகே, பெற்ற மகளை தந்தையே சுத்தியலால் தாக்கிக் கொலை செய்தார். ஊர் மக்கள் கூடியதை அறிந்து அவரும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மணியகாரம்பாளையம் ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54). உள்ளூரில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்று வந்தார். இவருடைய மனைவி மணி. இவர்களுக்கு பிரியா (15) என்ற மகள் இருந்தார். அவர், தாதாபுரம் அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு ரமேஷ்கண்ணன் என்ற மகனும் இருக்கிறார். கோபாலின் மனைவி மணி, கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக வெளியூருக்குச் சென்று விடுவார். மகன் ரமேஷ்கண்ணன், செட்டிமாங்குறிச்சியில் உள்ள ஒரு பேக்கரி...
மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் மீது இயல்பாகவே எழும் அதிருப்தி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் ஆளுமை இல்லாத நிலை ஆகியவற்றால் எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அதீத எதிர்பார்ப்பு திமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே வரும் தேர்தலில் வேட்பாளர் சீட் கேட்டு, திமுகவில் 'பசையுள்ள' விஐபிகள் பலரும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 1996, 2006 தேர்தல்களில் அதிமுக மீதான கடும் அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக கணிசமான இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மற்ற காலங்களில், ம...
காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டாம் முறையாக உயர்வு; சேலத்தில் 803; சென்னையில் 785 ஆக நிர்ணயம்!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமில்லா எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை, நடப்பு பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உள்நாட்டு சந்தையில் தேவை அளவு, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுனங்களின் கூட்டமைப்பு கூடி, விலை நிர்ணயம் செய்கின்றன.   நடப்பு பிப்ரவரி முதல் தேதியில் புதிய விலை அறிவிக்கப்படும் என வழக்கம்போல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அன்றைய நாளில், காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நடைமுறைக்கு மாறாக, பிப். 4ம் தேதியன்று எல்பிஜி சிலிண்டர் விலை 25 ரூபாய்...
மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

நாமக்கல், முக்கிய செய்திகள்
மல்லசமுத்திரம் அருகே, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரை, அவருடைய முன்னாள்  ஊழியர் உள்பட 7 பேர் காரில்  விரட்டிச்சென்று அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி காலனியை சேர்ந்தவர் முருகேசன் (50). திமுக பிரமுகர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர், மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக கவுன்சிலராக உள்ளார்.   முருகேசன், சொந்த ஊரில் பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார். மேலும், தனியார் நிறுவனங்களுக்கு தேவையான வடமாநில தொழிலாளர்களை ஒப்பந்தத்தின்பேரில் பணிக்கு அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி நிறுவனமும் நடத்தி வருகிறார்.   இவரிடம், மோர்பாளையம் அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர், கார் ஓட்டுநராகவும், மேலாளராகவும் 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்த...
எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் திடீர் ஏற்றம்; சேலத்தில் 753க்கு கிடைக்கும்!

முக்கிய செய்திகள்
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியமற்ற எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் திடீரென்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சேலத்தில் காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதம் 728ல் இருந்து 753 ரூபாயாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, நுகர்வுத்திறன், உற்பத்தித்திறன், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது. மாதந்தோறும் 1ம் தேதி முதல் புதிய விலை நடைமுறைக்கு வரும். கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக எல்பிஜி காஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை தலா 50 ரூபாய் வீதம் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் இரண்டு முறை விலையேற்றம் என்பதால் அரசியல் அர...
தொடர்ந்து இரண்டாவது மாதமாக மாறாத சமையல் காஸ் சிலிண்டர் விலை! சேலத்தில் 728க்கு கிடைக்கும்!!

தொடர்ந்து இரண்டாவது மாதமாக மாறாத சமையல் காஸ் சிலிண்டர் விலை! சேலத்தில் 728க்கு கிடைக்கும்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வீடுகளில் பயன்படுத்தப்படும்  மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து இரண்டாவது  மாதமாக நடப்பு பிப்ரவரி மாதத்திலும் உயர்த்தப்படவில்லை. முந்தைய  மாதத்தைப் போலவே சேலத்தில்  இவ்வகை சிலிண்டர் 728க்கு  கிடைக்கும்.   உலகச்சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்ளூர் சந்தை தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.     கடந்த டிசம்பர் மாதம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை தலா 50 ரூபாய் வீதம் ஒரே மாதத்தில் இரண்டுமுறை உயர்த்தப்பட்டது. சந்தையில் திடீர் தேவை அதிகரிப்பும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் அதன் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டது.   ஒரே மாதத்தில் அப்போது 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டது, வாடிக்கையாளர்களி...
பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!

இந்தியா, முக்கிய செய்திகள்
நடப்பு ஆண்டில் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என்றும், விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். முன்னதாக அவர், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அவருடைய மாளிகையில் சந்தித்துப் பேசினார்.   நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் முதன்முறையாக காகிதம் இல்லா பட்ஜெட் அறிக்கையை நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இதன்மூலம் 140 கோடி ரூபாய் மிச்சம...
பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

பட்ஜெட் 2021-2022: பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு: நிர்மலா

இந்தியா, முக்கிய செய்திகள்
பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக மத்திய பட்ஜெட் அறிக்கையின்போது நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.   கொரோனா பெருந்தொற்றால் ஒட்டுமொத்த துறைகளும் கிட்டத்தட்ட ஓராண்டாக பெரும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், மத்திய அரசின் நடப்பு 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், திங்கள் கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன்பே, பெரும்பாலும் தனியார்மயம் ஊக்குவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேப பங்கு விலக்கல் குறித்த அறிவிப்பும் வெளியானது. நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை பங்குகளை ஐபிஓ எனப்படும் ஆரம்பநிலை பங்கு விற்ப...
பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

பசு மாட்டு சாணி கதிரியக்கத்தை தடுக்குமா?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
உலகெங்கும் மாட்டு சாணம் பல்வேறு வகையில் பயன் தருகிறது. இந்தியா உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டு சாணியை வைத்து உருவாக்கப்படும் வரட்டி, சமையல் செய்ய எரிபொருளாகப் பயன்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலும் பயன்படுத்தி வந்துள்ளோம்.   மண் தரை, மண் சுவர் போன்றவற்றின் மீது மாட்டு சாணம் பூசும்போது பிணைப்பு பொருளாக மாறி மணல் துகள்கள் ஒன்றுடன் ஒன்று பிணையப் பயன்படுகிறது. காலம் காலமாக, உலகெங்கும், விவசாயிகள் மாட்டு சாணம் உட்பட கால்நடை கழிவுகளை எரு உரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாட்டு சாணம் அதுவும் குறிப்பாக நாட்டு பசுவின் சாணம் கதிரியக்கத்தை 60 சதம் தடுத்து விடுகிறது என ஆய்வு கூறுவதாக பத்திரிகை செய்திகள் வருகின்றன. அதன் பின்னணியில் உள்ள ஆய்வு என்ன? அந்த ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து அறிவியலார்கள் எழு...
கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

கடினமாக உழைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்! யார்க்கர் நாயகன் நடராஜன் நம்பிக்கை!!

சேலம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கடினமாக உழைத்தால் அதற்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு நானே உதாரணம் என்றார் 'யார்க்கர் நாயகன்' என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சேலம் நடராஜன். சேலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில் சேலம் வந்தார். சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அவருக்கு உள்ளூர் கிராம மக்கள், உறவினர்கள், நண்பர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து, செண்டை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். அவரிடம் ஊடகத்தினர் பேட்டி எடுக்க முயன்றபோது, பிசிசிஐயின் கட்டுப்பாடுகள் காரணமாக செய்தியாளர்களிடம் பேச மறுத்து விட்டார்.   இந்நிலையில், அவர் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) திடீரென்று ச...