விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ஜனாதிபதி
பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளான இன்று (ஜனவரி 29, 2018), நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
முன்னதாக, நாடாளுமன்றத்திற்கு வந்த அவரை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்றனர்.
ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று இரவு பணமதிப்பிழப்பு செய்தபோது பிரதமர் நரேந்திரமோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாக கூறினார். அதன் பின்னர், நள்ளிரவில் ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்த அறிவிப்பின்போதும் புதிய இந்தியா பிறந்ததாகக் கூறினார். அடிக்கடி அவருடைய உரையில் புதிய இந்தியா பற்றி குறிப்பிடுவது வழக்கமானதாகிவிட்டது.
இன்று உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் 2018ம் ஆண்டு புதிய இந்...






