
பட்ஜெட் 2021-2022: விவசாயிகளுக்கு 16.50 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு; விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்!
நடப்பு ஆண்டில் நெல்,
கோதுமை, கரும்பு உள்ளிட்ட
விளைபொருள்களுக்கு
குறைந்தபட்ச ஆதார விலை
உயர்த்தப்படும் என்றும்,
விவசாயிகளுக்கு 16.50 லட்சம்
கோடி ரூபாய் கடன் வழங்க
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளதாகவும் மத்திய
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் உரையில்
தெரிவித்துள்ளார்.
நடப்பு 2021-2022ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட்டை
மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1)
தாக்கல் செய்தார். முன்னதாக அவர்,
குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த்தை
அவருடைய மாளிகையில்
சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தில்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தாக்கல் செய்யும் பட்ஜெட்டிற்கு
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது. நாடு சுதந்திரம்
அடைந்தது முதல் முதன்முறையாக
காகிதம் இல்லா பட்ஜெட்
அறிக்கையை நிர்மலா சீதாராமன்
சமர்ப்பித்தார். இதன்மூலம்
140 கோடி ரூபாய் மிச்சம...