Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: head

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலையில், கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே மூத்த பேராசிரியர்கள் சிலர் துறைத்தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியதால் துணை வேந்தர் கடும் அதிருப்தி அடைந்தார்.   சேலம் பெரியார் பல்கலையில் 2018-19ம் கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூலை 2ம் தேதி தொடங்கின. இதையொட்டி, அன்றைய தினம் பல்கலையில் பணியாற்றும் அனைத்து உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம், துணை வேந்தர் கொழந்தைவேல் தலைமையில் நடந்தது.   செனட் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், பகல் 12 மணிக்கு தொடங்கி 1.45 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்ட நிகழ்வுகள் வெளியே 'லைவ்' ஆக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரின் செல்போன்களும் கூட்டம் முடியும் வரை செயல்படாத வகையில் ஜாமர் கருவி மூலம் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கு 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்பட
பெரியார் விவகாரம்: நேற்று இலை… இன்று சிலை… நாளை தலை…!

பெரியார் விவகாரம்: நேற்று இலை… இன்று சிலை… நாளை தலை…!

அரசியல், ஈரோடு, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வேலூர்
தோழர் பெரியார், புரட்சியாளர் லெனின் சிலைகள் கம்பீரமாய் வெட்டவெளியில் நிற்கின்றன. கடவுளர்கள் அச்சத்துடன் கருவறைக்குள் ஒடுங்கிப்போய் கிடக்கின்றனர். அதை வசதியாக மறந்துவிட்டு, ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துகளால் தமிழ்நாடே இன்று கொந்தளித்துக் கிடக்கிறது. பெரியார் சிலையை உடைப்போம் என்று கொக்கரிக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, சமூக ஊடகங்களிலும் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. பாசிஸ சித்தாந்தங்களில் திளைத்த ஜெயலலிதாகூட தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பெரியாரை சீண்டிவிடாமல் கவனமாகக் கடந்து சென்றார். ஆனால், தமிழக தேர்தல் களத்தில் நோட்டாவைக் கூட வீழ்த்த முடியாத பாஜக, தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டிற்கு எதிராகவும் கொக்கரித்து வருவது அனைத்து தரப்பிலும் கடும் அதிருப்திகளை உருவாக்கி வருகின்றன. திரிபுராவில் ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் அங்
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி யார்?; காவல்துறையையே கலங்கடித்தவர்!

ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி யார்?; காவல்துறையையே கலங்கடித்தவர்!

அரசியல், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி, போலீஸ் கமிஷனர் ஜார்ஜை கடுமையாக கண்டித்ததன் மூலம் பெரும் பரபரப்புக்கு உள்ளானார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். ஒரு மாதம் ஆகியும் அதற்கான அறிவிப்பு இல்லாதது குறித்து கடந்த 16ம் தேதி, நாமும், 'ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே? செய்வீர்களா?' என்ற தலைப்பில் புதிய அகராதி இணைய ஊடகத்தில் சிறப்புக் கட்டுரை எழுதி இருந்தோம். கடந்த சில நாள்களாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக மீண்டும் பரபரப்பு சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இன்று (செப். 25) உத்தரவிட்ட