
இமாலய ஊழல்: நீரவ் மோடியின் மோசடி வெளியானது எப்படி?
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்த 11400 கோடி ரூபாய் மோசடி நிகழ்வு, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாலய ஊழல்களின் தேசமாக இந்தியா மாறி வருகிறதோ என்ற பிம்பம் உலகளவில் எழாமல் இல்லை.
பிஎன்பி-ல் உள்ள சில அதிகாரிகளை வளைத்துப்போட்டுக் கொண்டு வைர வியாபாரி நீரவ் மோடி இப்படியொரு இமாலய திருட்டில் ஈடுபட ஓர் அசுரத்தனமான மூளையும் வேண்டும்தான்.
பிஎன்பி வங்கியின் சந்தை மதிப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கும், 2017ம் ஆண்டு கடைசி காலாண்டில் இந்த வங்கிக்கு கிடைத்த லாபத்தில் 50 மடங்குமாக நீரவ் மோடியின் மோசடி மதிப்பிடப்படுகிறது.
நீரவ் மோடி மட்டுமல்ல. அவரைப்போல மேலும் சில வாடிக்கையாளர்களும் நீரவ் மோடியின் உத்தியில் மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. ஆனால் அதெல்லாமே சொற்ப அளவுக்குதான்.
இத்தகைய மோ...