கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!
திமுக தலைவர் கலைஞர்
தொடாத எல்லைகளே இல்லை.
கலை, இலக்கியம், அரசியல்
என இறுதி மூச்சு வரை
பல தளங்களிலும் வெற்றிகரமாக
பயணித்தவர். சட்டப்பேரவையிலும்,
பொது வெளியிலும் சொல்ல வந்த
சேதியை சமயோசிதமாக
நகைச்சுவையுடன் சொல்லி,
எல்லோரின் கவனத்தையும்
ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு
கலைஞருக்கு மட்டுமே உரித்தானது.
அரசியல் தளத்தில் அவரை
எதிர்ப்போர் கூட அவரின்
நகைச்சுவையை விரும்பி
ரசிப்பார்கள்.
கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். 'நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....
* கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒ