
ஆளுங்கட்சி 1000; அதிமுக 500 ரூபாயும் வேட்டி சேலையும்! சூடு பறக்கும் வெண்ணந்தூர் உள்ளாட்சி தேர்தல் களம்!!
நாமக்கல் அருகே, வெண்ணந்தூர் 6வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக
தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கு முதல்கட்டமாக
அக். 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்
காலியாக உள்ள பதவிகளுக்கு
சனிக்கிழைமை (அக். 9)
தேர்தல் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம்
வெண்ணந்தூர் ஒன்றியத்தில்
6வது வார்டில் இருந்து மாவட்ட
கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட
அதிமுகவின் பி.ஆர்.சுந்தரம்,
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது
பதவியை ராஜிநாமா செய்துவிட்டார்.
அதையடுத்து அந்தப் பதவிக்கு
நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக
கூட்டணியாகவும், பாமக, தேமுதிக,
அமமுக,...