
காவல்நிலையங்களுக்கு தனி வாட்ஸ்அப் குழு! ‘சிறப்பான பணிகளை பதிவேற்றுங்கள்!!’
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும்
தங்களுக்கென தனி வாட்ஸ்அப் குழுவை
உடனடியாக உருவாக்க வேண்டும்
என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையை புலனாய்வில்
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக
ஒப்பிட்டு பேசப்பட்டு வந்தாலும், அண்மைக்காலமாக
மக்களுடன் நெருங்கிச் செல்ல காவல்துறையில்
பல்வேறு அதிரடி மாற்றங்கள்
புகுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களின் வாழ்நிலை,
முக்கிய பிரமுகர்கள், அவர்களின் தொழில்,
முக்கிய தொடர்புகள் குறித்த விவரங்களை
சேகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், மக்கள் எளிதில் காவல்துறை
உதவியை நாடும் வகையில்
அந்தந்த சரக காவலர் முதல் உயரதிகாரிகளின்
செல்போன் எண்களை பொது இடங்களில்
வெளியிட உத்தரவிடப்பட்டு உள்ளது.
பல மாநகரங்களில் பொதுமக்கள் நேரடியாக
வாட்ஸ்அப் மூலம் புகார்களை பதிவு செய்யவும்
...