Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தகவல்

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!;  நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!; நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தகவல், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகள் நாளை, (ஆகஸ்ட் 15, 2018) நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் திட்டத்தை முடக்கி வைக்க முடியும் என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.   கிராம மக்களுக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை நிருவுவதற்கான ஒரே இடம் கிராம சபைக்கூட்டம் எனலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஓராண்டில் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாள்களில் கண்டிப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இவை தவிர, தேவைக்கேற்ப சிறப்பு கிராம சபைக்கூட்டமும் நடத்திக்கொள்ள முடியும். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல ஊராட்சிகளில் கிர
1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.   அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.   பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்ப
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்

இந்தியா, கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வு எழுதப்பட வேண்டும். 2018-2019 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 6ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ம் தேதி (இன்று) வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இதற்கான அவகாசத்தை வரும் 12ம் தேதி (திங்கள் கிழமை) வரை நீட்டித்துள்ளது. அன்று மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். முன்பு நீட் தேர்வு எழுத ஆதார் அட்டை அவசியம் என்று அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஒரு வழக்கில், நீட் உள்ளிட்ட எந்த ஒரு நுழைவுத்தேர்வுக்கும் ஆதார் அட்டை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து, ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்படும்போது ஆதார் விவரங்களை உள்ளீடு செய்யத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளத
ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கல்லூரி ஆசிரியர் தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 1, 2018) வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (Teacher Eligibility Test - TET), அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 57 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்.
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க
ஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்!: அப்புறம் உங்க இஷ்டம்

ஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்!: அப்புறம் உங்க இஷ்டம்

இந்தியா, உலகம், தகவல், முக்கிய செய்திகள்
ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும் உலகமே கையில் வந்துவிட்டது போன்ற உணர்வு கிட்டிவிட்டது என்னவோ உண்மைதான். ஓர் அறைக்குள் அமர்ந்தவாறே உலகை அளந்து விடலாம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு அவரவர் உலகத்தில் தனியே லயித்து கிடப்பது கண்கூடு. ஆனால், ஸ்மார்ட் ஃபோன்களை அதிகமாக பயன்படுத்தும்போது மனிதர்களின் இயல்பு மாறுவதோடு, மகிழ்ச்சியும் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. சர்வே எடுப்பதில் புகழ்பெற்ற அமெரிக்காதான் இதைப்பற்றியும் ஓர் ஆய்வை அண்மையில் மேற்கொண்டது. அந்த நாட்டில் உள்ள ஏதோ ஓர் அமைப்புன்னு வெச்சுங்குங்களேன். அந்த அமைப்பு, சில லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறது. ஆய்வுக்கு உட்பட்ட எல்லோருமே 13 முதல் 19 வயது வரையுள்ள பதின்பருவத்தினர். ஆண், பெண் இருபாலரும் அடக்கம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம், மொபைல், டேப்லெட், கணி
போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 6140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று (டிசம்பர் 28, 2017) வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலர் நிலையிலான 5538 (ஆண் 3877, பெண் 1661) பணியிடங்களும், சிறைத்துறையில் 365 (ஆண் 319, பெண் 46) பணியிடங்களும் காலியாக உள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 237 தீயணைப்போர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சலுகைகள் இப்பணியிடங்களுக்கும் பொருந்தும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் திருநங்கைகளும்
பத்தாவது படித்திருந்தால் போதும்!; 9000 அரசு பணியிடங்கள் காத்திருக்கு!!

பத்தாவது படித்திருந்தால் போதும்!; 9000 அரசு பணியிடங்கள் காத்திருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு அரசில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 9 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன் போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தமிழக அரசு குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலியிடங்களை நிரப்புவதற்கு தனித்தனியாக போட்டித்தேர்வு நடத்தி வந்தது. இனி, அந்தப்பணியிடங்கள் அனைத்திற்கும் 'ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-4' (சிசிஎஸ்இ குரூப்-4) என்ற பெயரில் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று அண்மையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்தது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசில் குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 9351 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை இன்று (நவம்பர் 14, 2017) அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்டபடி ம
சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

கல்வி, சென்னை, தகவல், மகளிர்
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. "மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கி