Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (23/8/17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதா, குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அமிதவ ராய், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை நேற்...
இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரங்களில் முடிசூடா மன்னனாகத் திகழந்த வடிவேலுவுக்கு, கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மார்க்கெட் இறங்குமுகம்தான். 2011ம் ஆண்டில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டது. சந்தானம், சூரி, சதீஸ், ரோபோ சங்கர் போன்றோர்கள் வடிவேலுவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தாலும், மக்களிடம் அவர்களின் காமெடி எடுபடவில்லை. கடந்த ஓராண்டாக வடிவேலு மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டாலும், கடைசியாக அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன், எலி படங்கள் சரியாக போகவில்லை. விஷாலுடன் இணைந்து நடித்த காமெடி கதாபாத்திரமும் எடுபடவில்லை. இந்நிலையில் வடிவேலுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம், சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வேலைகளில் இறங்கியுள...
நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

நீட் தேர்வு: தமிழகம் ஏமாற்றம்!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என நடுவண் அரசு கைவிரித்து விட்டது. இதனால், நீட் தேர்வு அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங்கை உடனடியாக துவக்கி செப்டம்பர் 4ம்தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‛நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மாணவர் சேர்க்கை உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (22/8/17) விசாரணைக்கு வந்த போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் இல்லை. ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்களிக்க முடியாது. தமிழக அரசின் அவசர சட்டத்தை ஏற்க முடியாது என மத்திய அரசு கூறியது. இதனையடுத்து நீட் தேர்வு அடிப்படையில் இந்த வருடம் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை செப்டம...
‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியை சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர், ''தமிழர்கள் தலையில் இப்போது கோமாளி குல்லா'' என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைப்பை பற்றிதான் அவர் இவ்வாறு கேலி செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கமல்ஹாஸனை பின்பற்றி நடிகர் கஸ்தூரி, ஸ்ரீபிரியா, பார்த்திபன் ஆகியோரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளை ரத்தினச்சுருக்கமாக நையண்டி செய்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ''கிளியை வளர்த்து யாரோ குரங்கு கையில் கொடுக்க - அந்த குரங்கை பிடித்து யாரோ மனிதன் கையில் கொடுக்க - அப்படி இன்றியமையா இணைப்பிற்குப் பின்!!!'' என்று ட்வீ...
வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைப்புக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் பேசிய எம்பி வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவித்தார். பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு என்று அப்போதே வைத்திலிங்கம் கருத்துக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன், வைத்திலிங்கம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், சசிகலா தொடர்பாக யாரும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்சிய...
‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

‘எடப்பாடிய தூக்குங்க’; எம்எல்ஏக்கள் போர்க்கொடி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்; அவரை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று (22/8/17) ஆளுநர் (பொ) வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதிமுகவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். அவருடைய அணியைச் சேர்ந்த மாஃபா க.பாண்டியாராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சமீப காலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு அணிகளையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். நேற்று இரு அணிகளும் இணைக்கப்பட்டபோதும்கூட தினகரன் ஆதரவு தரப்பை, அவ்விரு தரப்புமே கண்டுகொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்த தினகரன் தரப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வைத்திருந்த நம்பிக்க...
அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

அஜித்தின் ‘விவேகம்’ பைசா வசூல் ஆகுமா?

சினிமா, முக்கிய செய்திகள்
ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படம், வரும் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. திரைக்கு வருவதற்கு முன்பே திரையரங்க விநியோக உரிமை, சாட்டிலைட் உரிமம், வெளிநாட்டு உரிமம் மூலம் ரூ.120 கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் சினிமா வாழ்வில், இந்தப்படம்தான் மிக அதிக பொருட்செலவில் தயாராகி உள்ளது. அதுவும் போட்ட பட்ஜெட்டுக்கு மேல். பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்டு உள்ளது. காஜல் அகர்வால், கதாநாயகியாக நடித்துள்ளார். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அவருடைய கேரக்டர் இதுவரை சஸ்பென்சாக வைக்கப்பட்டு உள்ளது. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் நடித்துள்ளார். வணிக ரீதியான அம்சங்கள் இத்தனை இருந்தாலும், அஜித்தின் முந்தைய ‘வேதாளம்’, ‘வீரம்’ ஆகிய படங்கள் திரையரங்க உரிமையாளர்...
துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய அணியைச் சேர்ந்த 'மாஃபாய்' க.பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுகவுக்குள் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக அக்கட்சி பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகளாக உடைந்தன. இதற்கிடையே, டிடிவி தினகரன் சில எம்எல்ஏக்ளை வளைத்துப் போட்டுக்கொண்டு தனி அணியாக செயல்பட்டார். அவருடைய குடைச்சல் நாளுக்குநாள் அதிகரித்ததை அடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை ...
ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை : அதிமுகவில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இன்று இணைந்தன. கட்சி அலுவலகத்திற்கு வந்த முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அணிகள் இணைப்பை உறுதி செய்தனர். இருவரும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். முதல்வர் பழனிசாமியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். முதல்வர் பதவியில் இருந்து விலகி பிறகு, 6 மாதங்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வந்தார். முதல்வர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற அமைச்சர் தங்கமணி, வேலுமணி மற்றும் எம்.பி., வைத்தியலிங்கம் அவரை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். கட்சி அலுவலகம் வந்த ஓபிஎஸ்.,க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் ம...
வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
''வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் உச்சம் தொடுவார்கள்'' தகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராமப் பள்ளிக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால், கல்வியில் உச்சம் தொடுவார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கல்லுக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே 20 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள். மலைக்கிராமங்களில் குறிப்பாக பழங்குடியினர் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றவே விருப்ப முன்னுரிமை தெரிவிக்காத இந்த நாளில், பழங்குடியின குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வாசிப்புப் பயிற்சி அளித்து வருகிறார், ஆசிரியர் நடராஜன். அவரை சந்திப்பதற்காக நாம் கல்லுக்கட்டு அரசுப்பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம். பள்ளி வேலை தொடர்பாக அ...