Saturday, October 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: தொழிலை விட்டு வெளியேறிய 40% ஆட்டோ ஓட்டுநர்கள்! கந்து வட்டிக்காரர்களிடம் வாகனங்கள் சரண்டர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சவாரியின்றி பெரும் நலிவைச் சந்தித்துள்ளனர்.   தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அக்கட்சி தெரிவித்து இருந்தது. ஆட்சிக்கு வந்த கையோடு, அத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது திமுக அரசு.   இதற்கு பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண் விவசாயி, ''கீரைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு சென்று வர பஸ் செலவு மட்டும் தினமும் 30 ரூபாய் ஆகிவிடும்.   கூவிக்கூவி விற்பதால் காலையில் சீக்கிரமாகவே பசியெடுக்கும். அதற்காக ஏன் செலவு செய்ய வேண்டும் என்று பட்டின...
சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம் மாநகராட்சியில் 719361 வாக்காளர்கள்; ஆண்களை விட பெண் வாக்குகள் அதிகம்!

சேலம், முக்கிய செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, சேலம் மாநகராட்சியில் புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் பட்டியலை, ஆணையர் கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை (டிச. 9) வெளியிட்டார். அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகன் முன்னிலையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.   இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் கூறியது:   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 1.11.2021ம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் கொகுதி ஒருங்கிணைந்த வாக்காளர் வரைவுப் பட்டியல்களை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.   வாக்காளர் பட்டியல்கள் அடிப...
ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

ஏற்றத்தில் பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 57600 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த இரண்டு செஷன்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மீண்டெழுந்து ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன. புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பற்றிய அதீத அச்சுறுத்தல்களால் உலகம் முழுவதும் கடந்த வார இறுதியிலும், நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன.   இந்நிலையில், முந்தைய கொரோனா வைரஸைக் காட்டிலும் பெரிய அளவில் பாதிப்பை ஒமிக்ரான் வைரஸ் ஏற்படுத்தாது என்ற தகவலால் பங்குச்சந்தைகள் இன்று தடாலடியாக மீண்டெழுந்தன.   இன்று வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் (1.56%) உயர்ந்து, 57633 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. அதேபோல, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 264.45 புள்ளிகள் உயர்ந்து 17176.70 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இது, முந்தைய நாள் ...
35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

35 வருடம் காத்திருந்து காதலியை கரம் பிடித்த சிக்கண்ணா! காலம் போட்டு வைத்த கணக்கு!

இந்தியா, முக்கிய செய்திகள்
  'பிணியும் மூப்பும் இறப்பும் மானுடர்க்கே அன்றி காதலுக்கு ஒருபோதும் அல்ல' என்பதை, 65 வயதிலும் தான் நேசித்த பெண்ணுக்காய் காதலை பசுமையுடன் பத்திரப்படுத்தி வந்திருக்கும் சிக்கண்ணா நிரூபித்திருக்கிறார்.   'காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை; மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்ந்ததில்லை' என்ற கண்ணதாசனின் வரிகள், சிக்கண்ணா - ஜெயம்மாவுக்கு ரொம்பவே பொருந்தும்.   கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் வசிக்கும் சிக்கண்ணாதான், கடந்த ஒரு வாரமாக இணையங்களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர். இத்தனைக்கும் இவர் இப்போதும் மிகச்சாமானியர்தான்.   கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவுக்கு கூலி வேலைக்காகச் சென்றிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரில் வசித்து வந்த அவருடைய உறவுக்கார பெண்ணான ஜெயம்மாவுக்கும் (60) பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கண...
50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

முக்கிய செய்திகள், வேலூர்
வட்டித்தொழில் தொடங்கி பாலியல் அத்துமீறல் வரை குற்றங்களில் அனாயசமாக ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர்.   வேலூர் மாவட்டம் கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (55). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் தர்மலிங்கம் (60). காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன், மனைவி இருவரும் இணைந்து வேலூரில் கடந்த 2018ம் ஆண்டு கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில்களை அடுத்தடுத்து தொடங்கினர். இவர்கள் நடத்தி வரும் தொழில்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வலை விரித்தனர்.   வெறும் 175 ரூபாய் ஊக்கத் தொகைக்காக பணம் கொடுத்தாவது எம்.ஃபில் பட்டத்தைப் பெறுவதில் முனைப்பு காட்டும் ஆசிரியர்களிடம், முதலீட்டுக்கு அதிக வட்டி என்றால் சும்மா ...
ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

ஷேர் மார்க்கெட்: பொதுப்பங்கு வெளியீட்டில் களம் இறங்கிய ஸ்டார் ஹெல்த்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மருத்துவக் காப்பீட்டுத் துறையில் கணிசமான சந்தைப் பங்களிப்பை வைத்திருக்கும் ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், நவ. 30ம் தேதி பொதுப்பங்கு வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.   பங்குசந்தைகளில் ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை வெளியிட்டு, முதலீடுகளை திரட்டுவதைத்தான் பொதுப்பங்கு அதாவது, ஐபிஓ என்கிறார்கள். இதுபோன்ற பொதுப்பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு, குறைந்த விலையில் பங்குகள் கிடைப்பதுடன், பட்டியலிடப்படும் நாளன்று பெரும்பாலும் கணிசமான லாபமும் கிடைத்துவிடும். அதனால் முதலீட்டாளர்களிடையே எப்போதும் ஐபிஓக்களுக்கு வரவேற்பு இருக்கும்.   இந்நிலையில், ஸ்டார் ஹெல்த் அன்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவ. 30) ஐபிஓவை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் பங்குச்சந்தை தரகரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா இந்நிறுவனத்தின் புர...
மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

மாப்பிள்ளை அவருதான்… ஆனா அவர் போட்டிருக்கிற டிரஸ் என்னுது! இது நாமக்கல் திமுக பாலிடிக்ஸ்!

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் செயல்பட்டு வந்தாலும், நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை சகலமும் நான்தான் என காலரை தூக்கிவிட்டு பவர் பாலிடிக்ஸ் நடத்தி வருகிறார் மாவட்ட பொறுப்பாளரான கேஆர்என். ராஜேஷ்குமார்.   நாமக்கல்லைச் சேர்ந்தவர் மருத்துவர் மாயவன். திமுகவின் மூத்த நிர்வாகிகளுள் ஒருவர். இவருடைய மகன் மதிவேந்தன் (36). நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். எம்பிபிஎஸ்., எம்.டி., படித்துள்ள மதிவேந்தன், 2021 சட்டமன்ற தேர்தலில் ராசிபுரம் தனித்தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு 2000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றார்.   யாருமே எதிர்பாராத வகையில் மதிவேந்தனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக அமைச்சரவையில் இவர்தான் மிகவும் ஜூனியர். அருந்த...
சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலத்தில் கோர விபத்து; காஸ் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்தன; 5 பேர் பலி!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கவிட்டல் 3வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடராஜன் (62). இவருக்கு தன் வீடு அருகே சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கோபி, கணேசன், முருகன் ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில், கோபியுடன் அவருடைய மாமியார் ராஜலட்சுமி, உறவினர் எல்லம்மாள் ஆகியோரும், கணேசன் வீட்டில் தாயார் அம்சவேணி, மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம், சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில் மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம், மகள் பூஜாஸ்ரீ ஆகியோரும் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீட்டிற்கு அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த பத்மநாபன் (48), தனது ...
சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தை! நிப்டி 17503; சென்செக்ஸ் 58664 புள்ளிகளில் நிறைவு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடந்த நான்கு நாள்களாக சரிவு கண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. ஐடி, உலோகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தில் பங்குகளை விற்க ஆரம்பித்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த நான்கு நாள்களாக இந்தியப் பங்குச்சந்தைகளில் நிலையற்றத் தன்மை காணப்பட்டது. வாரத்தின் முதல் நாளான திங்களன்றும் (நவ. 22) இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சி கண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமையும் லேசான சரிவுடன் தொடங்கியது. சிறிது நேரத்தில் சந்தைகள் மெதுவாக ஏற்றம் காணத் தொடங்கின. வர்த்தகத்தின் இறுதியில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் (0.34%) அதிகரித்து, 58664.33 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 86.80 புள்ளிகள் (0.50%) அதிகரித்து, 17503.30 ப...
5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
அதற்கு முன்பு இந்தியா கண்டிராத ஒரு மாபெரும் பேரிடரை நாடு அன்று இரவு சந்தித்தது. அந்த நாள், நவ. 8, 2016. திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சிகளில் தோன்றி, இரவு 8 மணி முதல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் இனி செல்லாது என்று அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். அதை டீமானிடைசேஷன் என்றார் பிரதமர். அதாவது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையாம். இப்படியொரு அஸ்திரத்தை ஏவிய பிறகு, தான் ஏன் அவ்வாறான முடிவுக்கு வந்தேன் என்பதற்கு மூன்று காரணங்களையும் சொன்னார். பணமதிப்பிழப்பின் மூலம் நாட்டில் உள்ள அத்தனை கருப்புப் பணத்தையும் ஒழித்துக் கட்டுவது; கள்ளப்பணத்தை அழிப்பது; டிஜிட்டல் பேமன்ட் எனப்படும் பணமில்லா நடவடிக்கையை வளர்த்தெடுப்பது என காரணங்களை பட்டியலிட்டார், பிரதமர் மோடி. இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நான்கு மணி நேரத்தில், அதுவரை புழக்கத்தில...