Friday, March 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா...
திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர். ''சொல்லுங்களேன்...கேட்போம்'' - இது நக்கல் நல்லசாமி.   ''அறிவுக்கோயில் தலைவரு போன பிப்ரவரி மாசம் சேலத்துல அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன் ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா...?,'' ''ஓ... நல்லா ஞாபகம் இருக்கு. கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு, கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே... தலைவரு பேரளவுக்கு சும்மா உட்கார்ந்துட்டுப் போனாரே... அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க... நல்லா ஞாபகம் இருக்கு...,''   ''நக்கலாரே... உமக்கு குசும்பு ஜாஸ்தியா''   ''அன்னிக்கு சாயங்காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு, அவரோட அப்பா நினைவாக செல்பி எடுத்துக்கிட்டாரு. புரோக்கர் ஊடகங்கள் எல...
திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர் பர்...
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இரு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. நடப்பு 2023ம் ஆண்டில், அமெரிக்காவின் ஜிடிபி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜெர்ம...
பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

பாஜக வெற்றி: புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

முக்கிய செய்திகள், வர்த்தகம்
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக பெற்ற அதிரிபுதிரியான வெற்றியின் தாக்கம், இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (டிச. 4) சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 400 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 418 புள்ளிகள் (2.07%) உயர்ந்து, 20686 புள்ளிகளில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1383 புள்ளிகள் உயர்வுடன் (2.05%) 68865 புள்ளிகளில் நிறைவடைந்தது. பொதுத்துறை வங்கிகள் 3.85 சதவீதம், நிதிச்சேவை நிறுவனப் பங்குகள் 3.23 சதவீதம், எனர்ஜி துறை பங்குகள் 2.61 சதவீதம், ரியால்டி நிறுவனப் பங்குகள் 2.03 சதவீதம் மற்றும் உலோகத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. அதேநேரம், மருந்து மற்றும் ஊடகத்துறை பங்குகள் லேசா...
ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

இந்தியா, முக்கிய செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு அதிகளவில் ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவு வகைகளில் பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது. அந்த நிறுவனமே கண்டு வியக்கும் அளவுக்கு 12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள் குவிந்துவிட்டதாக கூறுகிறது. அந்த வகையில், இந்த ஐபிஎல் சீசனில் கோப்பையை வென்றது உண்மையில் பிரியாணிதான் என்றும் அந்த நிறுவனம் பகடியாக கூறியுள்ளது. உணவு டெலிவரி வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள ஸ்விக்கி நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் நடந்த நாளன்று இந்தியர்கள் என்னென்ன ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து சில சுவாரஸ்யமான தரவுகளை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் மீது இந்தியர்களிடையே எப்போதும் பேரார்வம் உண்டு. ஒவ்வொரு ஐபிஎல் சீசனையும் அவர்கள் கொண்டாட்டமாக பார்க்கின்றனர். எந்த அணி வெல்லும், யார் யார் எத்தனை ரன் குவிப்பார்கள், ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்ற...
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

கலாச்சாரம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.   ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.   இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல) பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.   இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்டி ...
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.   மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.   தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:   வெட்கக்கேடு திட்டினார் துரோகம் செய்தார் ஊழல் ஒட்டுக்கேட்பு ஊழல் கொரோனா பரப்புபவர் வாய்ஜாலம் காட்டுபவர் நாடகம் கபட நாடகம் திறமையற்றவர் அராஜகவாதி சகுனி சர்வாதிகாரம் சர்வாதிகாரி அழிவு சக்தி காலிஸ்தானி இரட்டை வேடம் பயனற்றது ரத்தக்களரி குரூரமானவர் ஏமாற்றினார் குழந்தைத்தனம் கோழை கிரிமினல் முதலைக்கண்ணீர் அவமானம் கழுதை கண்துடைப்பு ரவுடித்தனம் போ...
விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

விக்ரம் – சினிமா விமர்சனம்! ”நல்லதைக்கூட முகமூடி போட்டுக்கிட்டுதான் செய்ய வேண்டியது இருக்கு!”

சினிமா, முக்கிய செய்திகள்
விக்ரம் - விமர்சனம் நடிகர்கள்: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஸ்வாதிஸ்தா மற்றும் பலர். இசை: அனிருத் ஒளிப்பதிவு: ஹரிஷ் கங்காதரன் ஆக்ஷன்: அன்பறிவ் எடிட்டிங்: பிலோமின் ராஜ் தயாரிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கம்: லோகேஷ் கனகராஜ்   கதை என்ன?:   காவல்துறை அதிகாரியான தன் மகனை டிரக் மாபியா கும்பல் கொலை செய்து விடுகிறது. மகனை இழந்த, முன்னாள் ரா ஏஜன்ட் கமல்ஹாசன், அந்த கும்பலை கண்டுபிடித்து அழித்தாரா? போதைப்பொருள் இல்லாத உலகத்தை படைத்தாரா? என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை.   திரைமொழி:   படத்தின் துவக்கத்திலேயே, பத்தல... பத்தல... பாடலில் அதகளம் செய்கிறார் கமல். அடுத்த காட்சியிலேயே அவரை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, கிரானைட் வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்து விடுகிறது. அவருடன் காளிதாஸ், ஹ...
எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

எப்படி இருந்தது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு? தேர்வர்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு வினாத்தாள் ஓரளவு எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5529 பணியிடங்களை நிரப்புவதற்கான அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித்தேர்வை சனிக்கிழமை (மே 21) நடத்தியது. மாநிலம் முழுவதும், 4012 மையங்களில் நடந்த இத்தேர்வை, 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். சேலம் மாவட்டத்தில், மொத்தம் 161 மையங்களில், 63437 பேர் தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், பாலபாரதி தேர்வு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார். முறைகேடுகளை தடுக்க, மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படைகளும், 55 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த இரண்டு ஆண்டாக டி...