Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஆணவக்கொலை

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கரூர், குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் புதன்கிழமையன்று (டிசம்பர் 12, 2018) நடந்த சாட்சிகள் விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. முடித்திருந்தார். கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.   இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத்தலைவர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர். தண்டவாளத்தில் சடலம்   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் - ஆனங்கூர் இடையே ரயில் தண
கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கிருஷ்ணகிரி, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை.   காவிரி ஆற்றில் சடலம்   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன.   இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர்,
கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்! #Gokulraj #Day10

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதிய தலைமுறை செய்தியாளர் பரபரப்பு சாட்சியம்! #Gokulraj #Day10

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான புதிய தலைமுறை டிவி செய்தியாளர் நாமக்கல் நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்தார்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்... சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதியன்று மாயமானார். மறுநாள் மாலையில் (24.6.2015), நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது.   பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து வந்ததாக கருதப்பட்ட நிலையில்தான் அவருடைய சடலம் கைப்பற்றப்பட்டது. அதனால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின.   தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை   இந்த வ
கோகுல்ராஜ் கொலை வழக்கு! சைகையால் மிரட்டிய யுவராஜ்…சீறிப்பாய்ந்தார் நீதிபதி…!!

கோகுல்ராஜ் கொலை வழக்கு! சைகையால் மிரட்டிய யுவராஜ்…சீறிப்பாய்ந்தார் நீதிபதி…!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ், குற்றவாளி கூண்டிற்குள் இருந்து கொண்டே அரசுத்தரப்பு சாட்சியை தலையசைவுகள் மூலம் மிரட்டியதும், அதற்கு நீதிபதி யுவராஜை கடுமையாக எச்சரித்ததும்தான் கடந்த வாய்தாவின் பரபரப்பு காட்சிகளாக அமைந்தன.   தண்டவாளத்தில் சடலமாக சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் சுவாதி. இவர்கள் இருவரும் கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.   நெருங்கிய நண்பர்களும்கூட. 23.6.2015ம் தேதியன்று, சுவாதியை சந்திப்பதற்காக திருச்செங்கோடு சென்ற கோகுல்ராஜை அடுத்த நாள் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகத்தான் கைப்பற்றியது போலீஸ்.   கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 15வது குற்றவாளியான கிரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (நவம்பர் 3, 2018) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.   ஆணவக்கொலை   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற அவர், 24.6.2015ம் தேதி மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தண்டவாளத்தில் சடலம் கவிழ்ந்து கிடந்தது. தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.   அவர் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்த சுவாதியை காதலித்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்
கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில், குறுக்கு விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சியை யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மிரட்டும் தொனியில் பேசியதற்கு, நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.   தண்டவாளத்தில் சடலமாக... சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தலை வேறு, உடல் வேறாக சடலம் கோகுல்ராஜின் சடலம் கிடந்தது.   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார். தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருக்கமான நட்பில் இருந்த கோகுல்ராஜ், அவரைச் சந்திக்க 23.6.2015ம் தேதி நாமக்கல் சென்றிருந்தார்.   ஆணவக்கொலை: அவர்கள் இருவரும், திர
கோகுல்ராஜ் வழக்கு: எதிர்தரப்பு கிடுக்கிப்பிடி; அரசுத்தரப்பு சாட்சிகள் திணறல்! #Gokulraj #day7

கோகுல்ராஜ் வழக்கு: எதிர்தரப்பு கிடுக்கிப்பிடி; அரசுத்தரப்பு சாட்சிகள் திணறல்! #Gokulraj #day7

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சிகள் சாட்சியம் அளிக்கும்போது தடுமாறினர். சில சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதியன்று மாலை நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.   ஆணவக்கொலை: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் உடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருங்கிப் பழகி வந்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் காதலிப்பதாக கருதிய ஒரு கும்பல் அவரை ஆணவக்க
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: ”தலை வேறு உடல் வேறாக தம்பியின் சடலம் கிடந்தது!”; அண்ணன் பரபரப்பு சாட்சியம்! #Day3 #Gokulraj

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: ”தலை வேறு உடல் வேறாக தம்பியின் சடலம் கிடந்தது!”; அண்ணன் பரபரப்பு சாட்சியம்! #Day3 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான அவருடைய அண்ணன் கலைச்செல்வன், ரயில் தண்டவாளத்தில் தன் தம்பி தலை துண்டமான நிலையில் சடலமாக கிடந்ததை நேரில் பார்த்ததாக பரபரப்பு நாமக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.   இன்ஜினியரிங் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதிக்கு இரண்டு மகன்கள். தந்தை, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுடைய மூத்த மகன் கலைச்செல்வன். இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி காலையில், வீட்டில் இருந்து கிளம்பிய கோகுல்ராஜ் அன்று இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. மறுநாளான 2015, ஜூன் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலைய
கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சரமாரி கேள்விகளால் அரசு தரப்பு சாட்சி திணறல்! #Day2 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கேட்ட சரமாரி கேள்விகளால் அரசுத்தரப்பு சாட்சி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார்.   சடலமாக கோகுல்ராஜ்...   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. மறுநாளான 24.6.2015ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜின் சடலம் கைப்பற்றப்பட்டது. காவல்துறையினர் விசாரணையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் பழகி வந்ததால், அவர்கள் காதலித்து வருவதாக எண்ணி கோகுல்ராஜை ஒரு கும்பல் திட்டமிட்டு ஆணவக