Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சினிமா

உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

உறியடி 2 – திரை விமர்சனம்! ‘சாமானியனின் அரசியல் பங்கெடுப்பை பேசுகிறது’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்தின் லாப வெறியால் மலைவாழ் மக்கள் சூறையாடப்படுவதையும், பெருமுதலாளியிடம் லாபம் அடையும் ஆளுங்கட்சி எம்பி, சாதிக்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகளையும் நையப்புடைக்கும் படமாக ஏப்ரல் 5ல் வெளிவந்திருக்கிறது, உறியடி 2. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு படம் தமிழில் வெளிவந்திருப்பதை நோக்கும்போது, கருத்துச்சுதந்திரம் இன்னும் இந்த தேசத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அல்லது சமகால அரசியல் பிரச்னைகளையும், அரசியல்வாதிகளையும் துகிலுறியும் காட்சிகள் இருப்பதை அறியாமல் படத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டதோ என்றும் கருத வேண்டியதிருக்கிறது.   நடிகர்கள்:   விஜய்குமார் விஸ்மயா சுதாகர் மற்றும் பலர்   ஒளிப்பதிவு: பிரவீண்குமார் இசை: கோவிந்த் வசந்தா எடிட்டிங்: லினு.எம் தயாரிப்ப
சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சூப்பர் டீலக்ஸ் – விமர்சனம்! ‘கஷ்டத்தை கொடுத்துதான் கடவுளை நினைக்க வைக்க வேண்டுமா?’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் விமர்சகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில், மார்ச் 29, 2019ம் தேதி வெளியாகி இருக்கிறது 'சூப்பர் டீலக்ஸ்'. மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு 'நான் லீனியர்' படங்கள் அடுத்தடுத்து பரிச்சயமாயின. அதன்பின், வானம், நேரம், மாநகரம் ஆகிய படங்கள் வெவ்வேறு மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியாக பயணித்து, இறுதியில் ஒரே புள்ளியில் இணைவது போன்ற படங்கள் அறிமுகமாகின. இரண்டாவது வகைமையிலானதுதான், சூப்பர் டீலக்ஸ். ஐந்து கதைகள் என்பதைக் காட்டிலும் ஐந்து நிகழ்வுகள் தனித்தனியாக நிகழ்கின்றன. ஆனால், அந்த நிகழ்வுகள் ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருக்கின்றன. அவை தற்செயலானவை.   நடிகர்கள்:   விஜய் சேதுபதி சமந்தா பகத் பாசில் காயத்ரி மிஷ்கின் ரம்யா கிருஷ்ணன் பக்ஸ் என்கிற
தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'தடையறத்தாக்க', 'மீகாமன்' வரிசையில் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு சிறந்த படைப்பு, 'தடம்'. அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார், அருண்விஜய். அந்த பட்டியலில் அவரின் ஆகச்சிறந்த படங்களுள் 'தடம்' படத்திற்கு முக்கிய இடம் உண்டு. நடிகர்கள்: அருண்விஜய் தன்யா ஹோப் ஸ்மிருதி வித்யா பிரதீப் யோகிபாபு பெப்சி விஜயன் மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: கோபிநாத்; இசை: அருண் ராஜ்; எடிட்டிங்: ஸ்ரீகாந்த் இயக்கம்: மகிழ் திருமேனி   கதையின் 'ஒன்லைன்': ஓருரு இரட்டையர்கள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அந்தக் கொலை வழக்கில் இருந்து சட்ட ரீதியாக விடுதலை செய்யப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என
தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

தோக்குறோமா ஜெயிக்குறோமாங்குறது முக்கியமில்ல… முதல்ல சண்ட செய்யணும்! வடசென்னை விமர்சனம்!! #VadaChennai

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்காரர்களாலும் உலகப்படங்களை எடுக்க முடியும் என்பதற்கான புதிய நம்பிக்கையை தனது 'ஆடுகளம்', 'விசாரணை' படங்களின் வாயிலாக நிரூபித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் இருந்து, மற்றொரு உலகத்தர படமாக வெளிவந்திருக்கிறது, 'வடசென்னை'.   விளிம்புநிலை மக்களின் கதை:   'இது வடசென்னை மக்களின் வாழ்வியல் கதை அல்ல' என்று மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் பயணிக்கிறார் வெற்றிமாறன். ஆனால், படம் நெடுக வடசென்னையில் வசிக்கும் பெரும்பான்மை விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத்தான் வணிகத்தன்மையோடு கொடுத்திருக்கிறார்.   வடசென்னையில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, போதைப்பொருள் கடத்தல் என கொடிக்கட்டி பறக்கிறது இரண்டு கோஷ்டி. ஒன்று, குணா (சமுத்திரக்கனி) தலைமையிலான கோஷ்டி. இன்னொன்று, செந்தில் (கிஷோர்) கோஷ்டி. இந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே, கேரம் போர்டு சாம்பியனாவதும், அதன்மூலம
நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார்? சாதிய ஒடுக்குமுறையை துகிலுரியும் பரியேறும் பெருமாள்! #PariyerumPerumal

சினிமா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமாக்களில் இதுநாள் வரை ஆகிவந்த காட்சி மொழியையும், நாயகத்தனத்தை தூக்கிப்பிடித்தலையும் சுக்கல் சுக்கலாக்கி, புதிய தடத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது, பரியேறும் பெருமாள். தமிழ் ரசிகனின் ரசனையையும் பல படிகள் உயர்த்தி இருக்கிறது. இனி, பரியேறும் பெருமாளுக்கு முன், பரியேறும் பெருமாளுக்குப் பின் என்று தமிழ் சினிமாக்களை காலவரிசைப்படுத்தலாம்.   மய்யக் கதாபாத்திரம்   நம்முடன் தெரு முனை கடையில் தேநீர் அருந்தும் சராசரி இளைஞனைத்தான் கதிர் பிரதிபலிக்கிறார். அவர்தான் பரியேறும் பெருமாள். கதை நாயகன். மய்யக் கதாபாத்திரம் அவருக்கானது என்றாலும், படத்தில் வரும் வேறு சில துணை பாத்திரங்களே இந்தக் கதைக்கு அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றன.   இரண்டே காட்சியில் வந்தாலும் திரை பார்வையாளர்களை அச்சச்சோ... அவரை விட்டுடுங்கடா என சொல்ல வைத்திருக்கும் பர
யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழில் ஹாரர், திரில்லர் வகைமை படங்களுக்கென இதுவரை ஆகிவந்த மரபுகளை முற்றாக தகர்த்து வீசிவிட்டு, வித்தியாசமான திரைமொழியில் வெளிவந்திருக்கிறது யுடர்ன்.   நடிகர்கள்: சமந்தா அக்கினேனி, 'ஈரம்' ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா, 'சித்திரம் பேசுதடி' நரேன், 'ஆடுகளம்' நரேன், சிறுமி ஆர்னா மற்றும் பலர்.   தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை: பூர்ணசந்திரா தேஜஸ்வி, ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி, எடிட்டிங்: சுரேஷ் ஆறுமுகம்   தயாரிப்பு: ஸ்ரீனிவாச சிந்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு, இயக்கம்: பவன்குமார்   கதை என்ன?:   குறிப்பிட்ட ஒரு மேம்பாலத்தில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்புக் கற்களை அகற்றிவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அவ்வாறு ஏன் நடக்கிறது? என்பதை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வ
மெர்குரி – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட் சுரண்டலை தோலுரிக்கிறது’

மெர்குரி – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட் சுரண்டலை தோலுரிக்கிறது’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சினிமா துறையினரின் நீண்ட வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு வெளியாகி இருக்கும் மெர்குரி, போற்றக்கூடிய புதிய முயற்சி எனலாம். கதை என்ன?: பாதரச (மெர்குரி) கழிவினால் செவித்திறன், பேச்சுத்திறன், பார்வையை இழக்கும் ஆறு முக்கிய பாத்திரங்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைதான் மெர்க்குரி. ஓசைகளற்ற உலகத்தில் குரலற்றவர்களுக்கு ஏற்படும் வலி நிறைந்த வாழ்வியல் எத்தகையது என்பதைச் சொல்கிறது மெர்குரி. இதுதான் படத்தின் ஒரி வரி கதையும் கூட. நடிப்பு: பிரபுதேவா, ரம்யா நம்பீசன், இந்துஜா, ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க், தீபக், அனிஷ் மற்றும் பலர். தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு - திரு, இசை - சந்தோஷ் நாராயண், தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச், இயக்கம் - கார்த்திக் சுப்புராஜ். திரைமொழி: இந்துஜா, ஷனந்த் ரெட்டி, ஷஷாங்க், தீபக், அனிஷ் ஆகிய ஐந்து பேரும் நண்பர்கள். இவர்களால் வாய் பேச இயலாது. காது கேட்கும் திறனும் அற்றவர்கள்
சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!:  சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள்

சினிமா, சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், 'நாம் தமிழர்' கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது. இயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும். சீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் 'அப்டேட்' செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ
ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதி
ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

இந்தியா, சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விருதுநகர்
ஸ்ரீதேவி: 13-08-1963 - 24-02-2018 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி, தங்கள் மகள், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிப்பாள் என ஒருபோதும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தம்பதியின் மகள், ஸ்ரீதேவி.   பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி ஒரு கந்தக பூமி. அந்த மண்ணில் இருந்து ஒரு கனவுக்கன்னி, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்திருக்கிறார் என்பதும்கூட நமக்கான அடையாளம்தான். அவர் மரித்துப்போனார் என்பதைக் கூட நம்ப முடியாத வகையில் கோடிக்கணக்கான மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். பால் மனம் மாறாத வயதிலேயே ஸ்ரீதேவி வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். நான்கு வயதிலேயே, 'துணைவன்' படத்தில் முருகன் வேடம். எல்லா