Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சினிமா

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

சினிமா, சேலம், முக்கிய செய்திகள்
கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கும் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று சமூக வலைத்தளங்களில் உலாவவிடுகிறது ஒரு கும்பல். அதைப்பார்த்த பெண்ணின் தந்தை, அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப்பெண்ணையும் அவருடைய அக்காவையும் அந்த கும்பல் கொன்றுவிட்டு, கொலைப்பழியை பெண்ணின் அக்காள் கணவர் மீது போட்டு விடுகிறது. கொலை முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின் அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம் கொலைகாரர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் திரவுபதி படத்தின் மையக்கதை.   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள
கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? – அஜயன் பாலா

கஸ்மாலம், கம்னாட்டி, பேமானி சொற்கள் எப்படி புழக்கத்திற்கு வந்தன? – அஜயன் பாலா

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னைக்கு வந்த இந்த பத்து வருடங்களில் சென்னை என்றால் மாம்பலம், அடையார், அண்ணா நகர், பெசன்ட் நகர், கேகே நகர், அசோக் நகர் ஆகிய நகரங்களைத்தான் நினைத்திருந்தேன். மீடியாக்கள் எனக்குள் அப்படித்தான் உருவாக்கி வைத்திருந்தன.   உண்மையான சென்னை என்றால் அதாவது பலகாலமாக மெட்ராஸ் என அழைக்கப்பட்டு வந்த சென்னை எதுவென்றால், இன்று வட சென்னை என குறிப்பிடப்படும் ராயப்பேட்டை, தண்டையார்பேட்டை, மூலக்கொத்தளம், கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஜார்ஜ் டவுன், கொண்டித்தோப்பு, புரசைவாக்கம், எழும்பூர் பகுதிகள்தான். ஒரு படத்தின் கள ஆய்வுக்காக முதன்முறையாக வட சென்னை செல்ல நேர்ந்த போதுதான் அதிர்ந்து போனேன். சென்னையின் அசலான முகங்களையும் இருண்ட தெருக்களையும் அப்போதுதான் பார்க்கிறேன்.   மூன்று சக்கர பளுதூக்கும் வண்டியிலேயே குடும்பம் நடத்தும் மகிழ்ச்சியான குடும்பங்களையும், மீனவர் வசிக்கும் சகதி ந
சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுமைக்கும் வர்க்க முரண் என்பது, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான வேறுபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பெருநிலத்தைப் பொருத்தவரை வர்க்கப்பிரிவினை என்பதில் சாதிய பாகுபாடும் உள்ளடங்கும். அதிலும் தமிழ்நாடு போன்ற ஆதிகுடிகளின் மண்ணில், வர்க்கப்பிரிவினை என்பது கண்டிப்பாக சாதியத்தையும் இணைத்தே வந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே நீதி என்ற சூழலில், வலுத்தவர்களிடம் இருந்து எளியவர்கள் எப்படி எல்லாம் தப்பிப்பிழைக்க போராட வேண்டியதிருக்கிறது என்பதை குருதி தெறிக்க பேசி இருக்கிறது, அசுரன். இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அக்.4ல் வெளியாகி இருக்கும் அசுரன் திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்கள் இருத்தலுக்காக கைகொள்ளும் போராட்டங்களை விவரிக்கிறது. படத்தின் மூலக்கதை, பூமணி எழுதிய 'வெக்கை' நாவல்தான் என்பதாலோ என்னவோ படம் முடியும் வரை பார்வையாளர்களின் உடலுக்குள்ள
அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
தான் செய்த கொலை குற்றங்களில் இருந்து, செய்யாத ஒரு கொலையைச் சொல்லி புத்திசாலித்தனமாக தன்னை காவல்துறையின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் ஒப்புதல் வாக்குமூலம்தான், 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே. பார்த்திபன் பாணியில் சொல்ல வேண்டுமானால், ஒரு நீலப்படத்தில் நடிக்க சன்னி லியோன் போன்ற ஒரே ஒருவர் போதும். ஆனால், ஒத்த செருப்பு போன்ற ஒரு முழு நீளப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பது இந்தியாவில் முதல் முயற்சி.   அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருக்கும் பார்த்திபனை மட்டுமே, பாப்கார்ன்கூட கொறிக்க விடாமல் திரையில் இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில், ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் அவர்களை இருக்கையில் கட்டிப்போட்டு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். தமிழ
நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

சினிமா, முக்கிய செய்திகள்
சர்வதேச நிழல் உலக தாதா ஒருவர் திடீரென்று எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவருக்குப் பிறகு நிழல் உலகை ஆளப்போவது யார்? என்பதுதான் சாஹோ படத்தின் ஒரு வரி கதை. ஒரு கமர்ஷியல் படத்திற்கு இந்தக் கதையே போதுமானதுதான். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் பெற்ற பெரு வெற்றி காரணமாக பிரபாஸ் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக வலுவான கதையோ, திரைக்கதையோ இல்லாமல் வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே கட்டி எழுப்பி படத்தைக் கட்டமைக்க முடியுமா? பிரபாஸ் இருந்தாலே போதும், போட்ட பணத்தை கல்லா கட்டிவிட முடியும் என நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுஜீத்.   கதைப்படி (கதை என்று ஒன்று இல்லை. ஆனாலும் 'ஒரு ஊர்ல...' என்று சொன்னால்தானே கதை வரும்? அதுபோலதான் 'கதைப்படி' என்பதும்), பிரபாஸ் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி. நமக்கு தெர
நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

நேர்கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்! ‘ஊசியைக் கேட்டுத்தான் நூலை நுழைக்கிறோமா?’

சினிமா, முக்கிய செய்திகள்
பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காலங்காலமாக நம் சமூகத்தில் கெட்டித்தட்டிப்போன பாலபாடங்களை நகல் எடுத்து எம்ஜிஆர் முதல் கமல், ரஜினி, விஜய் வரை தமிழின் அத்தனை மாஸ் ஹீரோக்களும் தங்கள் படங்களில் பெண்களுக்கு வகுப்பெடுத்து வந்த நிலையில், முதன்முதலாக பெண்ணை சக மனுஷியாகவும், அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்தாலே போதும் என்ற கருத்தை அஜித்குமார் என்ற மாஸ் ஹீரோ மூலமாக அழுத்தமாக பதிவு செய்திரு க்கிறது, 'நேர்கொண்ட பார்வை'. கடந்த 2016ம் ஆண்டு ஹிந்தியில் அமிதாபச்சன், டாப்ஸி நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின், அதிகாரப்பூர்வ மறு ஆக்கம்தான் 'நேர்கொண்ட பார்வை'. பெண்ணியம்தான் இப்படத்தின் பேசுபொருள். பெண்ணியம் என்றாலே, முண்டாசுக்கவிஞன் பாரதியை ஒதுக்கிவிட்டு நாம் அடுத்த அடி நகர முடியாதல்லவா? அதுதானோ என்னவோ, இப்படத்திற்கு 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பைச் சூட்டியிர
தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத ஒரு வர்க்கத்தினரின் வாழ்வியலும், அவர்களின் காதலையும் மண் மணத்துடன் சுமந்து வந்திருக்கிறது, 'தொரட்டி'.   கிராமங்களில் வழமையான சொல்வழக்கு ஒன்று உண்டு. நற்குடியில் பிறந்த ஒருவர் திடீரென்று தீய வழியில் சென்று சீரழிகையில், 'அவன் என்ன பண்ணுவான் பாவம்....சேருவரிசை சரியில்ல...' என்பார்கள். அப்படி கூடா நட்பால் கேடாய் முடிந்த இளைஞனை விரும்பி மணக்கும் அவனுடைய மனைவி, கணவனை திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்தினானா? எப்படியும் திருத்திவிடலாம் என நம்பி வந்த அவளுக்கு நேர்ந்தது என்ன? கணவனின் சேக்காலிகளுக்கு என்ன நடந்தது? என்பதை காதல், நட்பு, துரோகம், வன்மம் கலந்து, கிராமிய அழகியலுடன் பேசுகிறது, தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டம்தான் கதைக்களம். 1980களில் கதை நகர்கிறது. அறுவடை முடிந்த பிறகு விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பழக்கம், நெல்லை, ராமநாதப
ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமா உலகில், இந்த ஆண்டின் அண்மைய வரவுகளில் 'சூப்பர் டீலக்ஸ்', 'தடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு, ஆகச்சிறந்த படைப்பாக ஜீவி படத்தைச் சொல்லலாம். புதுமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத், கதை - திரைக்கதை - வசனகர்த்தா பாபு தமிழ் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வரவாக, அறிவார்த்தமாக ஜீவியில் பதிவு செய்திருக்கின்றனர். மிக வலுவான திரைக்கதை கட்டுமானத்துடன் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற '8 தோட்டாக்கள்' குழுவின், இரண்டாவது படைப்புதான் ஜீவி.   திரைக்கலைஞர்கள்:   நடிகர்கள்: வெற்றி கருணாகரன் மோனிகா சின்னகோட்ளா ரோகிணி, ரமா, 'மைம்' கோபி   இசை: சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு: பிரவீன்குமார் எடிட்டிங்: பிரவீன் கே.எல். கதை, வசனம்: பாபு தமிழ் திரைக்கதை: பாபு தமி-ழ், வி.ஜே.கோபிநாத் இயக்கம்: வி.ஜே.கோபிநாத்   கதை என்ன?:  
”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ரசிகன் பக்கம்)     இளையராஜா...   இந்த ஒற்றைப்பெயர் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்குமுள்ள திரையிசை ரசிகனை மீள் உருவாக்கம் செய்த மந்திரம் என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் கதாநாயக பிம்பத்தை உடைத்து, 'இசையமைப்பாளர் இளையராஜா' என்றாலே படம் பார்க்க போகலாம் என்ற நிலையை உருவாக்கிய பெருமை, ராகதேவனையே சேரும்.   மாட்டு வண்டி போகாத பாதையில் எல்லாம்கூட ராஜாவின் பாட்டு வண்டி போய்ச்சேர்ந்தது நிகழ்கால நிதர்சனம். 'வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா... வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா...' என்று அவருக்கு முன்பு இருந்த இசை ஜாம்பவான்களையும், அவருக்குப் பின்னால் வந்த இசைக்கலைஞர்களையும் 'ஓரம்போ... ஓரம்போ...' என்று ஓரங்கட்டிவிட்டு, உச்சாணிக்கொம்பில் வீற்றிருக்கும் ஒரே இசைக்கலைஞன் இளையராஜா.   அவருக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிக பட்டாளங்கள் இ
‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

‘அரங்கேற்றம்’ லலிதாக்கள் இன்னும் இருக்கிறார்கள்! – திரை விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அடுத்தடுத்து 'வதவத' என்று பிள்ளைக்குட்டிகளை பெற்றுப் போட்டதைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யாத தந்தை, கஞ்சிக்கே வக்கற்ற நிலையிலும் மனசு முழுக்க இலட்சம் கனவுகளை சுமந்து கொண்டு வாழும் தங்கைகள், தம்பிகளுக்காக தன்னையே தியாகம் செய்யும் லலிதாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரங்களையும், ஏமாற்றங்களையும் பட்டவர்த்தனமாக முகத்தில் அறைந்தாற்போல் பேசுகிறது அரங்கேற்றம்.   என்னதான் நாம் ஸ்விக்கி, ஸோமாட்டோ நாகரீகத்திற்குள் நுழைந்துவிட்டாலும், மூன்றாம் நபரின் அந்தரங்க செயல்பாடுகளை கூச்சமே இல்லாமல் முதுகுக்குப் பின்னால் கிசுகிசுப்பது இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே நாம் அந்த நாலு பேரைக் கண்டு சில வேளைகளில் அஞ்சவும் வேண்டியதிருக்கிறது. கதைதான் என்றாலும், 46 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்ணை மையமாக வைத்து, காலவெளியை உடைத்துக்கொண்டு முழு கதையையும் திரையில் விவரிக்க மு