Thursday, May 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Blog

துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர
ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்
இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

இந்தியா ஒற்றை நாடு அல்ல! “ஹிந்தி மொழியை திணித்தால் தமிழர்கள் ‘வெச்சி’ செய்வார்கள்” -சு.பொ.அகஸ்தியலிங்கம்

அரசியல், முக்கிய செய்திகள்
தமிழகம் உருவாக்கிய மொழி உணர்வு, இன்றைக்கும் இந்திய அரசியலில் ஓர் ஆக்கப்பூர்வமான பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அதில் சில தோல்விகள் இருக்கலாம்; பலகீனம் இருக்கலாம். நான் வரலாற்றை கொச்சைப்படுத்த வில்லை. இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடக்கி ஆண்டபோது ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். அதை ஒரு 'சேஃப்டி வால்வு' ஆக பயன்படுத்தினர். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான அமைப்பாக மாறியது. 1886ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்ட மூன்றாவது மாநாடு, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு முன்புவரை காங்கிரசார் ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். ஆனால் முதன்முறையாக அவரவர் தாய்மொழியில் பேசும் மாநாடாக அமைந்தது சென்னை மாநாடுதான். அந்த மாநாட்டில் மூக்கணாச்சாரி என்ற பொற்கொல்லர், எப்படி சிறுதொழில்கள் நசிந்தத
தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
-தில்லை தர்பார்- பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா? இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.   ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.   தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்ற
பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சிய
இன்றைய பெண்கள்  நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
("புதிய அகராதி", ஏப்ரல்-2017 இதழில்) இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, நான் பணிபுரிந்து வந்த சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் எனக்குக் கிடைத்தது. (வகுப்பறையில் வாசிக்கவும் வாழ்க்கையில் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்த என் குருகுலத்திற்கு நன்றிகள்). கனடாவில் டொராண்டோ ஹம்பர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று வாரப்பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. முதல் நாள் அனுபவமே மொத்த பயிற்சியின் சாராம்சத்தை சொல்லிக்கொடுத்தது. அன்று காலை இடைவேளையின்போது நானும் என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் கழிப்பறைக்குச் சென்றிருந்தோம்.   அங்கே மிக அழகான செல்லுலாய்டு பொம்மை கணக்காய் ஓர் இளம்பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். "இவ்வளவு அழகான பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து க
“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

“சாதியை ஒழிக்காமல் மலக்குழி சாவுகளை தடுக்க முடியாது” -‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா

அரசியல், கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ஏப்ரல்-2017, "புதிய அகராதி" இதழில்...)   ‘கக்கூஸ்’ அவணப்படத்தின் மூலம் மனிதக்கழிவு அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் துயர நிலையை, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் திவ்யபாரதி. அவருடனான உரையாடலில் இருந்து…   புதிய அகராதி: துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் எப்போது வந்தது?   திவ்யா: கடந்த 2015ம் ஆண்டு மதுரையில், மலக்குழியில் இறங்கி வேலை செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விட்டனர். இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு, அலட்சியமாக இருந்த அதிகாரிகளை கைது செய்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளும் போராடின.   அப்போது, இறந்த ஒரு தொழிலாளியின் இளம் மனைவி 'வா மாமா வ
உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
- தில்லை தர்பார் -   தன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருளல்ல. ஆனாலும், அதைப்பெற என்ன செய்வது என்று யோசித்து பார்த்தபோது உடனே ஞாபகம் வந்தது ஓர் அருமையான நண்பரின் பெயர்.   எட்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று என் கணவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. உதவிக்கு ஓடி வந்தது நண்பர் கூட்டம். உறவுகள் வேண்டாமென்று சொல்லவில்லை. உறவுகளைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நாம் துன்பப்படும்போது, 'நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் சொல்லும் நண்பர்களின் வார்த்தைகள் பெரிய டானிக்.   பல வருடங்களுக்கு முன்னால், பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதில் மூன்று பேருக்கு அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது வேலை கிடைத்து விட்டது. அந்த மூன்று பேரில் ஒருவன் என்னைப் பார்க்க வந
20 ரூபாய்க்கு வைத்தியம்…! “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”

20 ரூபாய்க்கு வைத்தியம்…! “ஏழைகளை நோக்கி நகரும் களஞ்சியம்”

மருத்துவம்
எப்பேர்பட்ட செல்வந்தர்களும் இடரி விழும் தருணம், எதிர்பாராத மருத்துவச் செலவுகளின்போது மட்டுமே. நடுத்தர, கீழ்நடுத்தர மக்களின் நிலையோ இன்னும் மோசம். மருத்துவர், அந்த ஸ்கேன் எடு; எக்ஸ் ரே எடு; சளி டெஸ்ட், சிறுநீர் டெஸ்ட் என டெஸ்டுக்கு மேல் டெஸ்ட் வைப்பார். மருத்துவர் கட்டணம், சிகிச்சை செலவு என்பதெல்லாம் இல்லாமல் பரிசோதனைக் கட்டணமே பாதி சேமிப்பை கரைத்து விடும். இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க, குறிப்பாக ஏழை மக்களுக்காகவே உதவ காத்திருக்கிறது, சேலம் சுகம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. களஞ்சியம் மகளிர் குழுவின் ஓர் அங்கமான இம்மருத்துவமனை, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர் சாலையில் இயங்குகிறது. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. "சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் குழுக்களில் முப்பது ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குழுவில் உள்ள எல்லோரும் கூலி வேலைக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்
மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

மிரட்டும் ஹீமோபிலியா…! “பெண்களையும் தாக்கும்” #Hemophilia

தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
'ஏப்ரல்-17 உலக ஹீமோஃபிலியா தினம்'   உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தால், ரத்தம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொண்ட சில நொடிகளிலேயே உறைய ஆரம்பித்து விடும். இது, நாம் உயிர் வாழ்வதற்காக இயற்கை நமக்களித்த கொடை.   ரத்தம் உறையாமை ஆனால், ஹீமோபிலியா (HEMOPHILIA) (ரத்தம் உறையாமை) குறைபாடு உள்ளவர்களுக்கு இங்குதான் சிக்கலே. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு ரத்தம் உறையாது. நீண்ட நேரம் ரத்தப்போக்கு நீடிக்கும். அதனால் உயிரிழப்புகூட நிகழக்கூடும்.   ரத்தம் உறைவதற்கு ஒரு வகையான புரதச்சத்து தேவை. இந்த புரதம், ரத்தத்தில் உள்ள 13 வகையான காரணிகளில் உள்ளன. அதை மருத்துவர்கள், பேக்டர் (Factor) 1 முதல் பேக்டர் 13 வரை வகைப்படுத்துகின்றனர்.   எக்ஸ் (X) குரோமோசோம் இந்த பேக்டர்கள் 'எக்ஸ்' (X) குரோமோசோம்களில் உள்ளன. அதனால்தான், 'எக்ஸ்' குரோமோசோம் பாதிக்கப்படும்போது, ரத்தம் உறைய