பங்குச்சந்தையை பதம் பார்த்த கோவிட் 2.O: ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு!!
கொரோனா இரண்டாவது
அலையின் தாக்கத்தால்
திங்கள்கிழமை (ஏப். 12)
இந்திய பங்குச்சந்தைகள்
கடும் வீழ்ச்சி அடைந்தன.
இதனால் முதலீட்டாளர்களுக்கு
ஒரே நாளில் 8.70 லட்சம் கோடி
ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும்
கொரோனா இரண்டாவது
அலையின் தாக்கம்
வேகமெடுத்துள்ளது.
இந்தியாவில் தினசரி
பாதிப்புகளின் எண்ணிக்கை
அதிகரித்து வரும் நிலையில்,
அதன் தாக்கம்
பங்குச்சந்தைகளிலும்
எதிரொலித்தது.
தேசிய பங்குச்சந்தையான
நிப்டி, திங்கள் கிழமை
(ஏப். 12) காலை 14644.65
புள்ளிகளுடன் வர்த்தகத்தை
தொடங்கியது. வர்த்தகத்தின்
இடையே அதிகபட்சமாக
14652.50 புள்ளிகளுக்குச்
சென்றது. குறைந்தபட்சமாக
14283.55 புள்ளிகள்
வரை சரிந்தது.
தேசிய பங்குச்சந்தையில்
பட்டியலிடப்பட்டுள்ள
50 பங்குகளில் வெறும்
4 நிறுவனங்களின் பங்குகள்
மட்டுமே முந்தைய வர்த்தக
தினத்தை விட சற்று ஏற்றம்
கண்டிருந்தன. 46 நிறுவ