![சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?](https://i2.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2019/09/salem-corp-elevation.jpg?resize=623%2C365)
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை எங்கே?
சேலம் மாநகராட்சி
ஊழியர்களின் சம்பளத்தில்
இருந்து வருங்கால
வைப்பு நிதி (பி.எப்.)
திட்டத்தின் கீழ் பிடித்தம்
செய்யப்பட்ட 5 கோடி ரூபாய்,
இதுவரை பி.எப். கணக்கில்
செலுத்தப்படாமல் உள்ளதால்,
பணிக்காலத்தில் இறந்த மற்றும்
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு
உரிய காலத்தில் பணப்பலன்கள்
வழங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் முதல் ஆணையர் / தனி அலுவலர் வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் எந்த ஒரு தொழிலகமும் தொழிலாளர் வருங்கால வைப்பது நிதி கணக்கு எனப்படும் இபிஎப் கணக்கிற்குள் அடங்கும். இபிஎப் கணக்கின்படி, மாதம் 15 ஆயிரத்திற்கும் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து அவர்களின் பங்களிப்பாக மாதம் 12 சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும். அதற்கு நிகராக வேலை அளிப்பவர் அ