Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெண் எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது!

தமிழகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அம்பைக்கு 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழில் சிறந்த படைப்பாளளர்களுள்
ஒருவராக திகழ்கிறார் அம்பை (77).
இவருடைய இயற்பெயர், சி.எஸ். லட்சுமி.
இவர், சிறகுகள் முறியும்,
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,
அந்திமழை, காட்டில் ஒரு மான்,
வற்றும் ஏரியின் மீன்கள் உள்ளிட்ட
பல படைப்புகளை எழுதியுள்ளார்.
தவிர, ஆங்கிலத்திலும் கணிசமான
நூல்களை எழுதியிருக்கிறார்.

 

இவர் பிறந்தது கோவையாக இருந்தாலும்,
மும்பை, பெங்களூருவில்தான் வளர்ந்தார்.
டெல்லி நேரு பல்கலையில் பி.ஹெச்டி
படிப்பை முடித்த அவர், பள்ளி, கல்லூரி
ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவருடைய கணவர், விஷ்ணு மாத்தூர்.
அவர் திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
தற்போது குடும்பத்துடன்
மும்பையில் வசிக்கிறார் அம்பை.

 

எழுத்தாளர் அம்பை தனது
18 வயதிலேயே ‘நந்தி மலை சாரலிலே’ (1962)
என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
தொடர்ந்து பெண்ணிய தளத்திலும்
இயங்கி வருகிறார்.

 

அவருக்கு நடப்பு 2021ம் ஆண்டுக்கான
சாகித்ய அகாடமி விருது
அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவர் எழுதிய,
‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’
என்ற சிறுகதை நூலுக்காக
இந்த விருது அறிவிக்கப்பட்டு
உள்ளது.

அதேபோல், கவிதை, சிறுகதை,
ஹைக்கூ, சிறுவர் இலக்கியம்
என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக
எழுதி வரும் எழுத்தாளர் மு.முருகேஷூக்கு
பால புரஸ்கார் சாகித்ய விருது
அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் எழுதிய
‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’
என்ற சிறுகதை தொகுப்புக்காக
இந்த விருது வழங்கப்பட உள்ளது.

 

இருவருக்கும் எழுத்தாளர்கள்,
இலக்கிய ஆர்வலர்கள் மற்றும்
பல்வேறு துறையைச் சேர்ந்த
பிரமுகர்கள் வாழ்த்து
தெரிவித்துள்ளனர்.