
அன்று தீவிரவாதி; இன்று வன்முறை! சிக்கிக் கொண்டாரா ரஜினி?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்
ஆலைக்கு எதிரான
போராட்டத்தின்போது
காவல்துறையினர் நடத்திய
துப்பாக்கிச்சூட்டில் 17 பேர்
பலியாயினர். அப்போது
இதுகுறித்து கருத்து தெரிவித்த
நடிகர் ரஜினிகாந்த்,
போராட்டக்காரர்களுடன்
தீவிரவாதிகளும் நுழைந்ததால்தான்
போராட்டம் வேறு திசைக்குச்
சென்றதாகவும், இப்படி
எதற்கெடுத்தாலும் போராடினால்
நாடு சுடுகாடு ஆகிவிடும்
என்றும் சொன்னார்.
இப்படி அவர் கருத்து சொன்ன அடுத்த நிமிடமே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். போராட்டக்காரர்களையும், குண்டடிபட்டு இறந்தவர்களையும் ரஜினி தீவிரவாதிகள் என்கிறாரா? என பொதுவெளியில் வினாக்களை முன்வைத்தனர். அதற்கு ரஜினியிடம் இருந்து மவுனமே பதிலாக இருந்தாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இந்நிலையில், நடுவண் பாஜக அரசு, குடியுரிமை திர...