Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: குலேபகாவலி

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

குலேபகாவலி – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில், 15 நாள் இடைவெளியில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம், 'குலேபகாவலி'. உலகம் எங்கும் இன்று (ஜனவரி 12, 2018) வெளியாகி இருக்கிறது. நடிப்பு: பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, 'முனீஸ்காந்த்' ராம்தாஸ், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ், யோகி பாபு, சத்யன் மற்றும் பலர்; இசை: விவேக் & மெர்வின்; ஒளிப்பதிவு: ஆனந்தகுமார்; தயாரிப்பு: கேஜேஆர்; இயக்கம்: கல்யாண். கதை என்ன?: பிரிட்டிஷ்காரர் ஒருவர் 1945ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறுகிறார். அவர் செல்லும்போது, அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த வைரங்களை திருடும் இந்தியர் ஒருவர், அதை குலேபகாவலி என்ற கிராமத்தில் புதைத்து வைக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த இந்தியரின் பேரனுக்கு குலேபகாவலி கிராமத்தில் வைர புதையல் இருப்பது தெரிய வருகிறது. அதை எடுக்க இந்தியாவுக்கு வரும் அவர், சிலை கடத்தும் கும்பலிடம் அந்த பொறுப்பை ஒப்படை
திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ… #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
 #தொடர்   ஒன்றரை அடி குறட்பாவில் உலகளந்தவன் வள்ளுவன். அதனால்தான், குறளின் பெருமையை, 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்றார், இடைக்காடர். ஏழு சீர் கொண்ட குறட்பாக்களை, பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்த்ததால்தான் தமிழர்கள் ஓரளவுக்கேனும் அதை படித்து வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால், திருக்குறளின் மேன்மையைச் சொல்ல, வடநாட்டில் இருந்து தருண்விஜய் போன்று யாராவது வந்தால்தான் ஆச்சு. குறளின் இன்பத்தை, நாம் திரை இசை வழியாக இந்த தொடரில் பார்த்து வருகிறோம். கருத்துச் சொல்வதாக இருந்தாலும், மசாலா சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால், 'போச்சுடா...இங்கேயும் பாடம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்களா...?' என வாசகர்கள் சட்டென அடுத்தப் பக்கத்தை திருப்பிவிடுவார்கள். அதனால்தான் குறளின் வலிமையை சினிமா பாடல்களின் ஊடாக சொல்லிக் கொண்டு இருக்கிறேன். காதலை, அதன் வலிமையை,