Tuesday, October 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாட்டில் உள்ள எல்லா காட்சி ஊடகங்களும் திட்டமிட்டு தமிழ்க்கொலை செய்வதாகவும், அதனாலேயே ஊடக விவாதங்களில் பங்கேற்க விரும்புவதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.   இலக்கிய மேடை, அரசியல் மேடை என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த தரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத், அரசியல் களத்தை விட்டு வெறியேறி விட்டதாக கடந்த ஆண்டு கூறினார். மதிமுக தலைவர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து வெளியேறி, சில காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே துணை கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வசதியாக அவருக்கு ஜெ., புதிதாக இன்னோவா கார் ஒன்றும் பரிசாக வழங்கினார். இன்னோவா காருக்காக அதிமுகவ...
இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேட்டி அளித்ததாக உடுமலை கவுசல்யாவை பணியிடைநீக்கம் செய்து வெலிங்டன் கண்டோன்மென்ட் உத்தரவிட்டுள்ளது.   திருப்பூர் அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா. தேவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர், கூலிப்படையை ஏவி பட்டப்பகலில் சங்கரை ஆணவப்படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கவுசல்யா சமூகநீதி அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார். முற்போக்கு அமைப்புகள் பெயரில் இயங்கி வரும் சில அமைப்புகள் அவரை புதிய போராளியாக முன்னிறுத்தின.   சங்கர் படுகொலைக்குப் பிறகு, அவர...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

கோகுல்ராஜ் கொலை வழக்கு: குறைந்தபட்ச பலப்பிரயோகம் என்றால் தெரியுமா? தெரியாதா?; சாட்சியிடம் ‘கிடுக்கிப்பிடி! #Gokulraj #Day19

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் எதிரி பிரபுவை காவல்துறையினர் கைது செய்தபோது குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்தார்களா இல்லையா? உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? என்று அரசுத்தரப்பு சாட்சியிடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கிடுக்கிப்பிடியாக கேள்விகள் கேட்டதால், சாட்சி குழப்பம் அடைந்தார். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். அவருடைய சடலம், மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் கைப்பற்றினர்.   கோகுல்ராஜ், தன்னுடன் படித்து வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்ததால், அவர் சாதி ஆணவ ரீதியில் கொல்லப்பட்டதாக அப்போது பல்வேறு தலித் அமைப்ப...
திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?

திண்ணை: என்னதான் நடந்தது பெரியார் பல்கலையில்?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
-திண்ணை-   ''பெரியார் பல்கலைக்கழகத்துல முக்கிய பதவிகளுக்கு ஜனவரி 31, 2019ம் தேதி நடக்க இருந்த இண்டர்வியூவை திடீர்னு ஒத்திவைச்சுட்டாங்களாம். இதுக்கெல்லாம் பேனாக்காரர் பேச்சுதான் காரணம்னு பல்கலைக்கழக வட்டாரத்துல உங்கள பத்திதான் பரபரப்பா பேசிக்கிறாங்கனு,'' சொல்லியபடியே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம நக்கல் நல்லசாமி. ''யோவ் நக்கலு.... அந்த சேதிய நானும் கேள்விப்பட்டேன். அதுக்காக நம்ம பேச்சாலதான் இண்டர்வியூ நின்னுப்போச்சுனு சொல்லி நமக்கு நாமலே பெருமை பேசிக்கிடலாமா?னு,'' கேட்டுக்கொண்டே உப்பு தூக்கலாக போட்ட வறுகடலையை கொறிக்க ஆரம்பித்தார் பேனாக்காரர்.   அப்படியே நமக்கும் ரெண்டு உப்புக்கடலை கொடுங்கனு வந்து அமர்ந்தனர் பொய்யாமொழியாரும், ஞானவெட்டியாரும்.   ''சரி....இண்டர்வியூ எதுனால நின்னுப்போச்சாம்?'' ஆரம்பித்தார் ஞானவெட்டியார்.   ...
பேனாக்காரன் பேச்சு: பெரியார் பல்கலையில் அடுத்த பதிவாளர், தேர்வாணையர் யார்?

பேனாக்காரன் பேச்சு: பெரியார் பல்கலையில் அடுத்த பதிவாளர், தேர்வாணையர் யார்?

கல்வி, சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
பகல்ல பக்கம் பாத்து பேசணும்... ராத்திரியில அதுவும் பேசக்கூடாதுனு சொல்லுவாங்க என்றபடியே ஞானவெட்டியானையும், ஊர்சுற்றியையும் தோள்களில் தட்டியவாறே திண்ணையில் வந்து அமர்ந்தார் நம்ம பேனாக்காரர். ''நீ விஷயம் இல்லாம இந்த நேரத்துல வர்ற ஆளு இல்லையே... என்ன விஷயம் என கேட்டேவிட்டார்'' ஊர்சுற்றி. வேறென்ன...வழக்கம்போல பெரியார் பல்கலைய பத்தின சேதிதான்.   ''பெரியார் பல்கலையில தேர்வாணையர் பதவி 2018ம் வருஷம் பிப்ரவரி மாசத்துலருந்து காலியா கிடக்கு. ஆகஸ்ட் மாசத்துல இருந்து பதிவாளர் பதவியும் காலியாயிருச்சு. ஒரு பல்கலைக்கு துணைவேந்தர் பதவி எப்படி முக்கியமோ அதுபோல இந்த ரெண்டு போஸ்டுமே ரொம்ப ரொம்ப முக்கியமானது,'' என்று பேனாக்காரர் சொல்லி முடிப்பதற்குள், ''அதெல்லாம் தெரிஞ்ச கதையாச்சே புதுசா என்ன இருக்கு?,'' என அவசரப்படுத்தினார் ஞானவெட்டியான்.   ''எதுக்கு இத்தன அவசரம்....அவசர...
அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் ஐந்து பேரை திடீரென்று இடமாறுதல் செய்தும், மூன்று மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு இடமாறுதல்?   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன் இந்த இடத்தில் பணியாற்றி வந்த முதல்வர் மருதுபாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனிதா ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடமும் காலியாக இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் சாரதா, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். &nb...
சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வராக இருதயவியல் துறை மருத்துவர் திருமால்பாபு (55) இன்று (ஜனவரி 29, 2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.   சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜூலை 5, 2018ம் தேதி, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூத்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார்.   சேலம் மட்டுமின்றி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்த தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் புதிதாக முழுநேர முதல்வர்களை நியமித்து, தமிழக அரசு கடந்த ஆண்டு செப். 12ம் தேதி உத்தரவிட்டது. அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வ...
விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.   இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...
பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

கோகுல்ராஜ் கொலை வழக்கு: ‘சிறப்பான, தரமான சம்பவங்கள் இனிமேல்தான் வரப்போகுது!’ #Gokulraj #Day17

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசுத்தரப்பில் அடுத்தடுத்து விஞ்ஞானப்பூர்வ தடயங்கள் பற்றி, சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ளனர். அதனால் யுவராஜ் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர்களிடையே நீதிமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்பதால் இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015, ஜூன் 23ம் தேதி சாதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 24ம் தேதி மாலை, திருச்செங்கோடு கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர்.   இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குமார் என்கிற சிவக்குமார், சதீஸ் என்கிற சதீஸ்கும...