திண்ணை: ஆளுங்கட்சி ‘கடாரம் கொண்டான்’ – சேலம் மாநகராட்சி அதிகாரி மோதல்?
''அரசியல் சதுரங்கத்தில் சில நேரம், நல்ல அதிகாரிகளின் தலைகள் உருட்டப்படுவது சகஜம்தான்,'' என்றபடியே நக்கல் நல்லசாமியின் வீட்டுத் திண்ணையில் வந்தமர்ந்தார் நம்ம பேனாக்காரர்.
''என்ன பேனாக்காரரே...
வந்ததும் வராததுமா புதிர் போடுறீரு...?''
என கேட்டபடியே, சூடான தேநீரை
எடுத்து வந்தார் நக்கல் நல்லசாமி.
''அது ஒண்ணுமில்ல...
ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி,
மாங்கனி மாவட்டத்துல
ஆளுங்கட்சியைச் சேர்ந்த
மூத்த நிர்வாகியான 'நேதாஜி'
பெயர் கொண்ட ஒருத்தரு,
மாவட்டத்தைக் கட்டி ஆளும்
கருமேக அதிகாரியும், மாநகராட்சியின்
முக்கிய அதிகாரியான 'இயக்குநர் சிகரம்'
பெயர் கொண்ட அதிகாரியும்
இலைக்கட்சிக்கு ஆதரவாக
செயல்படுவதாக ஒரு குண்டைத்
தூக்கிப் போட்டார். அவருடைய
குரல் பதிவுதான், சமூக ஊடகங்களில்
வைரல் ஆகிட்டு இருக்கு.
அவரை இப்படி பேசச்சொல்லி
தூண்டி விட்டதும் கூட
ஆளுங்கட்சியின்