
உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்
- தில்லை தர்பார் -
தன்னம்பிக்கை என்பது
கடையில் வாங்கும் பொருளல்ல.
ஆனாலும், அதைப்பெற
என்ன செய்வது என்று
யோசித்து பார்த்தபோது
உடனே ஞாபகம் வந்தது
ஓர் அருமையான
நண்பரின் பெயர்.
எட்டு வருடங்களுக்கு முன்னால்
திடீரென்று என் கணவருக்கு
ஒரு விபத்து நேர்ந்தது.
உதவிக்கு ஓடி வந்தது
நண்பர் கூட்டம்.
உறவுகள் வேண்டாமென்று
சொல்லவில்லை.
உறவுகளைத் தாண்டி
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,
நாம் துன்பப்படும்போது,
'நான் இருக்கிறேன்' என்று
ஆறுதல் சொல்லும்
நண்பர்களின் வார்த்தைகள்
பெரிய டானிக்.
பல வருடங்களுக்கு முன்னால்,
பொறியியல் கல்லூரியில்
படித்துக்கொண்டிருந்த
நான்கு மாணவர்கள்
எனக்கு நன்கு
பரிச்சயமானவர்கள்.
அதில் மூன்று பேருக்கு
அவர்கள் இறுதியாண்டு
படித்துக் கொண்டிருந்தபோது
வேலை கிடைத்து விட்டது.
அந்த மூன்று பேரில்
ஒருவன் என்னைப்
பார்க்க வந...