இளையராஜாவின் மகள் பவதாரணி திடீர் மரணம்!
இளையராஜாவின் மகளும், பிரபல திரையிசை பின்னணி பாடகியுமான பவதாரணி இன்று (ஜன. 25) மாலை உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47.
இசைஞானியும், ராஜ்யசபா எம்.பி.,யுமான
இளையராஜாவின் ஒரே மகள் பவதாரிணி.
இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்
சிறு வயதிலேயே இசைத்துறைக்குள்
காலடி வைத்துவிட்ட பவதாரணி,
பின்னணி பாடகி, இசையமைப்பாளர்,
கவிஞர் என பன்முகத்திறமை
கொண்டவராக விளங்கினார்.
இவருடைய உடன்பிறந்தவர்களான கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகியோரும் பிரபல இசையமைப்பாளர்களாகத் திகழ்ந்து வருகின்றனர்.
பிரபுதேவா நடித்த ராசய்யா
படத்தில்தான் இவர் முதன்முதலில்
பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார்.
பாரதி படத்தில் இவர் பாடிய,
மயில்போல பொண்ணு ஒண்ணு... என்ற
பாடலுக்காக சிறந்த பின்னணி
பாடகிக்கான தேசிய விருது பெற்றார்.
இதற்கிடையே,
அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரிய வ