Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம் மாவட்ட
மத்திய கூட்டுறவு
வங்கி மற்றும் இதர
கூட்டுறவு அமைப்புகளில்
காலியாக உள்ள உதவியாளர்
பதவிக்கான போட்டித்தேர்வு
நவ.23, 24 ஆகிய
நாள்களில் நடக்கிறது.

 

சேலம் மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கி
தலைமை அலுவலகம்
மற்றும் அதன் கிளைகளில்
காலியாக உள்ள 89 உதவியாளர்
பணியிடங்கள், போட்டித்தேர்வு
மற்றும் நேர்முகத்தேர்வு மூலம்
நிரப்பப்பட உள்ளன. இதற்கான
அறிவிப்பு, கடந்த
28.8.2019ம் தேதி
(அறிவிக்கை எண்: 02/2019)
வெளியிடப்பட்டது.

அதேபோல்,
மத்திய கூட்டுறவு வங்கி
தவிர இதர நகர கூட்டுறவு
வங்கிகள், கூட்டுறவு
சங்கங்களில் காலியாக
உள்ள 52 உதவியாளர்
பணியிடங்களும்
மேற்சொன்ன தேர்வு
முறைகள் மூலம்
நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்த அறிவிப்பும்
மேற்கண்ட தேதியில்
(அறிவிக்கை எண்: 01/2019)
வெளியிடப்பட்டது.
இனசுழற்சி உள்ளிட்ட
அனைத்து இடஒதுக்கீடு
விதிமுறைகளின்படி
இப்பணியிடங்கள்
நிரப்பப்படும்.

 

மத்திய கூட்டுறவு வங்கி
உதவியாளர் பணிக்கு
விண்ணப்பித்துள்ள
தேர்வர்களுக்கு நவம்பர்
23ம் தேதி போட்டித்தேர்வு
நடக்கிறது. அவர்களுக்கு
சேலம் அம்மாபேட்டை
சக்தி கைலாஷ் மகளிர்
கல்லூரி, சேலம்
சின்னத்திருப்பதி ஜெய்ராம்
பப்ளிக் பள்ளி, சேலம்
கோட்டை அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி ஆகிய
மூன்று மையங்களில்
தேர்வு நடக்கிறது.

 

அதேபோல்,
இதர கூட்டுறவு வங்கிகள்,
சங்கங்களில் உதவியாளர்
பணிக்கு
விண்ணப்பித்துள்ளோருக்கு
நவ. 24ம் தேதி
போட்டித்தேர்வு நடக்கிறது.
சேலம் சின்னத்திருப்பதி
ஜெய்ராம் பப்ளிக் பள்ளி,
காமராஜ் காலனியில் உள்ள
ஸ்ரீகணேஷ் கலை அறிவியல்
கல்லூரி ஆகிய இரு
மையங்களில் தேர்வு
நடக்கிறது. தேர்வுகள்
காலை 10 மணி முதல்
மதியம் 1 மணி
வரை நடக்கிறது.

 

தேர்வு மைய அனுமதி
சீட்டுகள், www.slmdrb.in
என்ற இணையதளத்தில்
இருந்து பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.

 

இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு பின்னர் நடத்தப்படும். தேர்வுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது. மேலும் விவரங்களை 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.