Monday, April 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

முக்கிய செய்திகள்

”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்

”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை  ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து கருத்து கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ தான் விசாரிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையை ஏற்க முடியாது என்று கூறினார். இதுகுறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, ''கே.பி.முனுசாமி, தமிழ்நாட்டு போலீசாரையோ, ஓய்வுபெற்ற நீதிபதியையோ நம்ப மாட்டாரா? அவருக்கு மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமா? ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒருபோதும் இணையவே இணையாது. அதற்கான சாத்தியமே இல்லை,'' என்றார்.
சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

சிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.பி.முனுசாமி கூறுகையில், ''ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை ஏற்க முடியாது. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்,'' என்றார். காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ''பாஜகவின் தூண்டுதலின்பேரிலும், ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்காகவும்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கருதுகிறேன். வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அந்த சொத்து யாரிடம் இருக்கிறது? அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை,'' என்றார்.
ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

ஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். அவர் வாழ்ந்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். லண்டன் மருத்துவர் ரிச்சர் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். அவர் சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் சசிகலா குடும்பத்தினர், மருத்துவர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அதனால்
நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

நோயாய் நெஞ்சினில் நீ நுழைந்தாய்…! திரை இசையில் வள்ளுவம் (தொடர்)

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
திரை இசையில் வள்ளுவம்: (தொடர் - 8/17) நோயாய்  நெஞ்சினில் நீ நுழைந்தாய் மருந்தை ஏனடி தர மறந்தாய்...   கடந்த இரண்டு தொடர்களிலும் 'ஊக்கம் உடைமை', 'மெய்ப்பொருள் அறிதல்' என அடுத்தடுத்து அறிவுரை மழையாகி விட்டதே என்று வாசகர்கள் சிலர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான் இந்த முறை, நோயும் நோய் தீர்க்கும் மருந்தையும் பாடுபொருளாக எடுத்துக் கொண்டோம்.   'என்னது மருத்துவக் கட்டுரையா?. அதற்குத்தான் 'நலமறிய ஆவல்' என்ற பகுதி இருக்கிறதே' என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதற்றம் கொள்ள வேண்டாம். நான் குறிப்பிடும், நோய் என்பது நோய் அல்ல; மருந்து என்பதும் மருந்து அல்ல. ஆனால், அந்த நோயும் மருந்தும் ஆதாம் ஏவாள் காலத்து அரதப்பழசு.   சரி. பீடிகை போடாமல் விஷயத்திற்கு வருகிறேன். 'மகாதேவி' (1957) படத்தில் ஒரு சிறுவனின் காலில் பாம்பு கடித்து விடும். எந்தப் பாம்பு கடித
நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்

நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு உடல்நலம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் அல்வா வாசு. அமைதிப்படை, சிவாஜி, கருப்பசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் பெரிய அளவில் அல்வா வாசுவை கொண்டுபோய் சேர்த்தன. கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சையில் இருந்து வந்த அவர், படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்களிலும் உடல் அளவில் மெலிந்து காணப்பட்டார். கல்லீரல் பிரச்னைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கும்
காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

காஞ்சி பட்டுச்சேலையிடம் மனதை தொலைத்த அமெரிக்க பெண் தூதர்

இந்தியா, முக்கிய செய்திகள்
புதுடில்லி : மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு அலையும் இந்தியர்கள் மத்தியில், இந்தியாவுக்கான, அமெரிக்க பெண் தூதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுதந்திர தினமான நேற்று, இந்தியாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, 'டுவிட்டர்' சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்கா பெண் தூதர் மேரிகே கார்ல்ஸன். இவர், இந்திய கலாசாரத்தில் மிகுந்த பற்று கொண்டவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். 'நெட்டிசன்'களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் பட்டு புட
சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

சிங்கத்துடன் மோத வேண்டாம் கமல்-அமைச்சர் மிரட்டல்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் பொறுமை இழந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிங்கத்துடன் மோத வேண்டாம் என மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கைகளை, நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, 'ஊழலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாமா?' என, கேள்வி எழுப்பி இருந்தார் கமல்ஹாசன். மேலும், 'என் இலக்கு, தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே. என் குரலுக்கு வலு சேர்க்க, யாருக்கு துணிச்சல் உள்ளது; இதற்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் உதவியாக வரலாம். அவர்கள் மழுங்கி போயிருந்தால், வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஊழலிலிருந்து சுதந்திரம் பெறாத வரை, நாம் இன்னும் அடிமைகளே... புதிய சுதந்திர போராட்டத்திற்கு சூளுரைக்க, துணிவு உள்ளவர்கள் வரலாம்; நிச்சயம் வெல்வோம்,' என்று, பதி
திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

திமுக தலைவர் கருணாநிதி டிஸ்சார்ஜ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை: தொண்டையில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை உணவுக்குழாய் மாற்றப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 7 மாதங்களாக அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார். வீட்டிலிருந்தபடியே அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று (16/07/17) அதிகாலை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி திடீரென்று அனுமதிக்கப்பட்டார். தொண்டையில் உணவு செலுத்துவதற்கான குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேர ஓய்வுக்கு பின் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார். ராசாத்தி , கனிமொழி, தமிழரசு மற்றும் செல
சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சொந்த வீடு எல்லோருக்கும் சாத்தியம்!: ‘விஜயஸ்ரீ பில்டர்ஸ்’ டி.ஜே. ராஜேந்திரன்

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள், வெற்றி பிறந்த கதை
-வெற்றி பிறந்த கதை-   சேலத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவர்... சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் என வெகு சிலரையே சொல்ல முடியும். அந்தப்பட்டியலில் டி.ஜே.ராஜேந்திரன், தவிர்க்க முடியாத ஆளுமை.   மிகச்சமீபத்தில், பழனியில் வனதுர்க்கை, மகிஷாசுரமர்த்தினி கோயிலுக்கு கோடிக்கணக்கில் செலவிட்டு, மண்டபம் கட்டிக்கொடுத்து, கும்பாபிஷேகம் நடத்தி முடித்த அருளாளர். கல்வி உதவி கேட்டு செல்லும் ஏழைகளுக்காக இவருடைய அலுவலக கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்றால் மிகை இல்லை.   தமிழகம் முழுவதும் கல்லூரி, பள்ளி கட்டடங்களை தனது 'விஜயஸ்ரீ கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்', விஜயஸ்ரீ பில்டர்ஸ், விஜயஸ்ரீ புரமோட்டர்ஸ் நிறுவனங்களின் மூலம் கட்டிக்கொடுத்து, சேலத்தின் பெயரை பறைசாற்றி வருகிறார். உழைப்பால் உயர்ந்த டி.ஜே.ராஜேந்திரன் அவர்களை, 'வெற்றி பிறந்த கதை' பகுதிக்காக அவருடைய அலுவலகத்தில்
”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

”நான்தான் ஜெயலலிதாவின் கதாசிரியர்!”; மறக்கப்பட்ட படைப்பாளியின் கதை! #Jayalalitha #Rajinikant

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை 'ரன் மெஷின்' என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, 'எழுத்து இயந்திரம்' என்றே சொல்லலாம்.   இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக்குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை. இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. 'சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, 'புவனா ஒரு கேள்விக்குறி' (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.   தவிர, 'பனிமலை' என்ற நாவல், 'என்னதான் முடிவு?' (1965) படமாக ஆக்கம் பெற்றது. 'பத்ரகாளி' (1976), 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' (1977), 'வட்டத்துக்குள் சதுரம்' (1978), 'நதியை தேடிவந்த கடல்' (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன. &