Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: girl child

நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

நாமக்கல்: 14 வயது சிறுமியை ‘வேட்டையாடிய’ 12 பேர்; சீரழித்த அரசு ஊழியர்; விருந்தாக்கிய மாமா!

குற்றம், நாமக்கல், முக்கிய செய்திகள்
குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை அக்காள் கணவரே சீரழித்ததோடு, நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதில், பிஎஸ்என்எல் அதிகாரியும் சிக்கியுள்ள நிலையில், 12 பேரை கூண்டோடு கைது செய்திருக்கிறது காவல்துறை.   நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (55). இவருடைய மனைவி லட்சுமி (45). தறித்தொழிலாளிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள்; ஒரு மகன். மூத்த மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இளைய மகள் செல்வி (14). (பெற்றோர் மற்றும் செல்வியின் பெயர்கள் புனையப்பட்டவை).   சந்திரசேகருக்கு உடல்நலம் சரியில்லாததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தந்தையை கவனித்துக் கொள்வதற்காக சிறுமி செல்வி, 6ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார். செல்வியின் மூத்த அக