Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DMDK

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு, பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில் எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான். ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் க
திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''ஒண்ணு, முட்டா பீஸூ... இன்னொன்னு அடிமுட்டா பீஸூ.... ஆனாலும் சில நேரத்துல ரெண்டு பேருமே கெட்டிக்காரய்ங்கப்பா...'' என்று பேசிக்கொண்டே திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   ''அட அந்த ரெண்டு பேரும் யாருனு சொன்னாத்தானே எங்களுக்கெல்லாம் விளங்கும்'' என்றார் நக்கல் நல்லசாமி.   அதற்குள் தர்பூசணி பழத்துண்டுகளுடன் வந்து அரட்டையில் ஐக்கியமானார் நம்ம ஞானவெட்டியார். ''போன சட்டமன்ற தேர்தலப்பவே முரசு கட்சிய திமுக கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுல சூரியக்கட்சி படாதபாடு பட்டுச்சு. அவங்க கேட்ட தொகுதிகள், தேர்தல் செலவுனு பேரம் படியாததாலதான் சூரியக்கட்சில இருந்து வெளியேறி, மநகூவுல சங்கமிச்சாரு கேப்டன். இந்தமுறையும் முரசு கட்சிய கூட்டணிக்குள்ள இழுக்கறதுல வழக்கம்போல தளபதியார் சொதப்பிட்டாரேனு சூரியக்கட்சிக்காரய்ங்களே புலம்புறாங்கப்பா.   மாம்பழம்தான் கனியாம
ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், 'ரஜினி, ஒரு பயந்தாங்கொள்ளி' என்றும், 'விஸ்வரூபம்' படத்த வெளியிட கமல்ஹாஸன் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை, அதிமுக, திமுக, பாஜக செயல்பாடுகள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விஜயகாந்த், தனக்கே உரிய உடல்மொழியில் பதில் அளித்தார். உடல்நலம் தேறி வந்திருக்கும் விஜயகாந்தின் குரல், சில இடங்களில் குளறுவதுபோல் இருந்தது. நடிகர் கமல்ஹாஸன், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே என்று கேட்டபோது, ''அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு...? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்,'' என்று பதில் அளித்தார். கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, ''விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கியபோதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வே