Saturday, October 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

மாணவர்களுக்கு வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள்; மருத்துவ பரிசோதனை! செப். 1 முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதுடன், வைட்டமின், ஸிங்க் மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், தமிழகத்தில் வரும் செப். 1ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான முன்ஆயத்தக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.   இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் கார்மேகம் சனிக்கிழமை (ஆக. 21) விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:   கொரோனா தொற்று குற...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.   பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க...
ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொருளாதாரத்தின் மேல் அடுக்கில் உள்ளோரும், அரசின் உயர் மட்ட அதிகாரத்தில் இருப்போரும் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து எப்போதும் விலகியே இருக்கின்றனர். அதனால் வெகுசன மக்களும் அத்தகைய அரசு ஸ்தாபனங்களை நம்பாமல் தனியாருக்குச் செல்லும் போக்கு சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.   இந்நிலையில், தனது ஒரே ஒரு செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.   சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.   இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்தது. இ...
தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதன்முதலாக 2021-2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (ஆக. 13), சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்து, உரையாற்றினார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கை, காகிதங்களில் அச்சிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்படும். காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கில், முதன்முதலில் காகிதமில்லா பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை அறிந்து கொள்வதற்காக அனைத்து எம்எல்ஏக்களின் இருக்கையிலும் கணினித் திரை வைக்கப்பட்டது.   பட்ஜெட் 2021 சிறப்பு அம்சங்கள்:   இலவச வீடுகள்:   நடப்பு 2021 - 2022ம் நிதியாண்டில் 8017 கோடி ரூபாய் செலவில் சுமார் 2 லட்சம் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். கிராமப்புற ...
ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்ற வேண்டாம்! தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் 2021 - 2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக. 13) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் வரலாற்றில் முதன்முதலாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் ஆனது.   நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாற்றினார்.   திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளில் ஆண்களை குடும்பத் தலைவராக பதிவு செய்திருந்த பலர், பெண்களை குடும்பத்தலைவராக குறிப்பிட்டு ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யத் தொடங்கினர்.   இதனால் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பெண்கள் பெயரில் புதிய ரேஷன் கார்டுக்காக பதிவு செய்வோர் கூட்டம் அலைமோதி...
கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

கொரோனா தொற்று அதிகரிப்பு; இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்!

தமிழ்நாடு
கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்க, ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று (ஆக. 9) முதல் கூடுதலாக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாலை 6 மணி வரை மட்டுமே ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள் செயல்பட அனுமதித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு ஆக. 23ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ள இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே சூழ்நிலைக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிமாக்கிக் கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளா மாநிலத்தில் கொரோனோ நோய்த்தொற்று சரிந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேலும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து எல்லையோர மாவட்டங்களான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில...
உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

உத்தம வில்லன்! கெஞ்சிக்கேட்ட இளம்பெண்… திருடிய கைப்பை, செல்போன், ஏடிஎம் கார்டுகளை திருப்பிக்கொடுத்த திருடன்!!

திருச்சி, முக்கிய செய்திகள்
'பெண்ணென்றால் பேயும் இரங்கும்' என்பது எங்கு, யாருக்கு பொருந்திப் போயிருக்கிறதோ இல்லையோ... அந்தப் பழமொழி, திருச்சியில் இளம்பெண் ஒருவருக்கு பலித்திருக்கிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் இலஞ்சியம். இவருடைய மகள் கார்குழலி (23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). குஜராத் மாநிலத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.   சில நாள்களுக்கு முன்பு, எடமலைப்பட்டிபுதூரில் உள்ள தன் தோழியைப் பார்ப்பதற்காக தாயாரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, கிட்டத்தட்ட இருட்ட தொடங்கி இருந்த நேரம் அது.   எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், இலஞ்சியம் கையில் வைத்திருந்த மகளின் கைப்பையை 'லபக்'கென்று பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார். &nb...
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு குடும்...
கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்திக்...
ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

ஸ்டாக் மார்க்கெட்டில் இன்று பட்டியலிடப்படுகிறது சொமேட்டோ பங்குகள்! முதலீட்டாளர்கள் இடையே பலத்த எதிர்பார்ப்பு!!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
ஆன்லைன் உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள சொமேட்டோ நிறுவனத்தின் பொதுப்பங்குகள், இந்திய பங்குச்சந்தைகளில் இன்று (ஜூலை 23) பட்டியலிடப்படுகின்றன. இந்நிறுவனம், வியாபார விரிவாக்கத்திற்காக பொதுப்பங்குகள் வெளியீடு மூலம் 9375 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்திருந்தது. இதையடுத்து, இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை 14 - 16ம் தேதி வரை ஐபிஓ எனப்படும் பொதுப்பங்கு வெளியீட்டில் முதன்முதலில் களமிறங்கிறது. ஒரு பங்கின் விலை 74 - 76 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கு காலத்திலும் கடந்த நிதி ஆண்டு கணிசமாக லாபம் ஈட்டி இருந்தது. எனினும், அந்நிறுவனத்துக்கு கடன் சுமையும் இருந்து வருகிறது. இதனால் பொதுப்பங்கு எந்தளவுக்கு வெற்றி பெறும் என்ற தடுமாற்றமான நிலை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், எதிர்பாராத வகையில் சொம...