இபிஎஸ் தொகுதியில் அதிகாலையில் பயங்கரம்! மகளை சுத்தியலால் தாக்கி கொன்ற காய்கறி வியாபாரி; மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை!
தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமியின்
தொகுதிக்கு உட்பட்ட
மணியகாரம்பாளையம் அருகே,
பெற்ற மகளை தந்தையே
சுத்தியலால் தாக்கிக் கொலை
செய்தார். ஊர் மக்கள் கூடியதை
அறிந்து அவரும் மாடியில் இருந்து
கீழே குதித்து தற்கொலை செய்து
கொண்ட சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் இடைப்பாடி
அருகே உள்ள மணியகாரம்பாளையம்
ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் கோபால் (54).
உள்ளூரில் தள்ளுவண்டி மூலம்
காய்கறி விற்று வந்தார்.
இவருடைய மனைவி மணி.
இவர்களுக்கு பிரியா (15) என்ற
மகள் இருந்தார். அவர்,
தாதாபுரம் அரசுப்பள்ளியில்
பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களுக்கு ரமேஷ்கண்ணன்
என்ற மகனும் இருக்கிறார்.
கோபாலின் மனைவி மணி,
கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி.
அடிக்கடி வேலைக்காக
வெளியூருக்குச் சென்று விடுவார்.
மகன் ரமேஷ்கண்ணன்,
செட்டிமாங்குறிச்சியில் உள்ள
ஒரு பேக்கரி