Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Village Council meeting

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு; கிராம சபையில் பரபரப்பு!; எடப்பாடி மண்ணில் ஓயாத சலசலப்பு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2018) நடந்த கிராம சபைக்கூட்டங்களில் எட்டு வழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.   கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் கட்டாயமாக அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சுதந்திர தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தன. இக்கூட்டம் கூட்டப்படுவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பாக தண்டோரா போட்டு, மக்களுக்கு எந்த இடத்தில் கூட்டம் நடக்கிறது? எத்தனை மணிக்கு தொடங்குகிறது? விவாதிக்கப்பட வேண்டிய பொருள்கள் என்னென்ன என்பது முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும்.   ஆனால், ஜ
எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!;  நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!; நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தகவல், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகள் நாளை, (ஆகஸ்ட் 15, 2018) நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் திட்டத்தை முடக்கி வைக்க முடியும் என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.   கிராம மக்களுக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை நிருவுவதற்கான ஒரே இடம் கிராம சபைக்கூட்டம் எனலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஓராண்டில் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாள்களில் கண்டிப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இவை தவிர, தேவைக்கேற்ப சிறப்பு கிராம சபைக்கூட்டமும் நடத்திக்கொள்ள முடியும். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல ஊராட்சிகளில் கிர