Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: the party was split into two teams

துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

துணை முதல்வரானார் ஓபிஎஸ்; செம்மலைக்கு இடமில்லை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்ததை அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவருடைய அணியைச் சேர்ந்த 'மாஃபாய்' க.பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. செம்மலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அதையடுத்து, நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுகவுக்குள் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு காரணமாக அக்கட்சி பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி என இரண்டு அணிகளாக உடைந்தன. இதற்கிடையே, டிடிவி தினகரன் சில எம்எல்ஏக்ளை வளைத்துப் போட்டுக்கொண்டு தனி அணியாக செயல்பட்டார். அவருடைய குடைச்சல் நாளுக்குநாள் அதிகரித்ததை அடுத்து, ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைவது குறித்த பேச்சுவார்த்தை