பாலக்கோடு: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்! ஆசிரியர் பணியிடைநீக்கம்!!
தர்மபுரி மாவட்டம்,
பாலக்கோடு அருகே பள்ளி
வகுப்பறையில் சிறுமிகளிடம்
பாலியல் அத்துமீறலில்
ஈடுபட்டதாக வந்த
புகாரின்பேரில் கணித
ஆசிரியர் பணியிடைநீக்கம்
செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம்
பாலக்கோடு அருகே
வெள்ளி சந்தையில்
அரசு நடுநிலைப்பள்ளி
செயல்பட்டு வருகிறது.
1 முதல் 8ம் வகுப்பு வரை
செயல்படும் இப்பள்ளியில்
90 மாணவ, மாணவிகள்
படித்து வருகின்றனர்.
பிரகாஷ்குமார் (54) என்பவர்,
இப்பள்ளியில் கணித
ஆசிரியராக பணியாற்றி
வருகிறார். கடந்த
பத்து நாள்களுக்கு முன்பு,
ஆசிரியர் பிரகாஷ்குமார்,
6ம் வகுப்பு படித்து வரும்
இரண்டு மாணவிகளிடம்
வகுப்பறையில் வைத்து
பாலியல் அத்துமீறலில்
ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
சம்பந்தப்பட்ட
சிறுமிகள் இதுபற்றி
பெற்றோர்களிடம் அன்றே
கூறியிருக்கின்றனர்.
அதன்பேரில், பெற்றோர்கள்
இதுபற்றி பள்ளித்தலைமை
ஆசிரியர் சிவகாமசுந்தரியை
நேரில் சந்தித்துப் பு