Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Salem youth attacked by Mystery people

சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம், முக்கிய செய்திகள்
சேலம்: சேலம் வாலிபரை சரமாரியாக தாக்கி, பணம், நகைகளை பறித்துச்சென்றதாக அரசு ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. சேலம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ராகேஷ் (37) (படம்). டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியும், பண்ணை அமைத்துக் கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஏற்காடு முளுவி பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இவருடைய தோட்டத்தில், கடந்த ஜூலை 23ம் தேதி தனியார் நிறுவனம் சார்பில் 245 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதன்மூலம் சேகரமாகும் தேனில் ஒரு பகுதியை நிலத்திற்குச் சொந்தமானவருக்கு வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நா